செய்திகள் :

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

post image

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.

அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக பா.ஜ.க எம்.பி அனில் போண்டே அமராவதி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில் வாட்ஸ் ஆப் மற்றும் ஸ்நாப்சாட் குரூப் மூலம் மைனர் பெண்களைக் குறிவைத்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலில் விழவைத்துள்ளார்.

அதன் பிறகு அவர்களை மும்பை, புனே போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து அதனைத் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அதனைக் காட்டி தொடர்ந்து அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

கைது
கைது

அவரது மொபைல் போனில் இருந்து 350 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 180 மைனர் பெண்களை தன்வீர் தனது காதல் வலையில் விழவைத்துள்ளார்.

அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும், அப்படி அமைக்கவில்லையெனில் எஸ்.பி அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்துவேன் என்றும் அனில் போண்டே தெரிவித்துள்ளார்.

சில முஸ்லிம் அமைப்பின் பெரியவர்களும் போலீஸாரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் தன்வீர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மைனர் பெண்களை ஆபாச படம் எடுத்து அதனைக் காட்டி சிலரை விபசாரத்தில் ஈடுபடும் படியும் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

அதோடு அதற்கு உடன்பட மறுத்த சில பெண்களின் ஆபாச வீடியோவை ஆன்லைனிலும் பகிர்ந்துள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார். போலீஸார் தன்வீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரது மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆபாச வீடியோக்களை நண்பர்களுக்குப் பகிர்ந்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண்ணைத் திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு; கேரள சிபிஎம் நிர்வாகிகளிடம் விசாரணை?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை; நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரிய... மேலும் பார்க்க

திருவள்ளூர்: திருமண ஏற்பாடு; நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மகள் சிரிஷா (19). இவர் திருப்பதியில் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு படிப்பை பாத... மேலும் பார்க்க

மும்பை: தமிழ் மூதாட்டியிடம் டிஜிட்டல் மோசடி; ரூ.33 லட்சம் பறித்த குஜராத் கிரிக்கெட் வீரர் கைது

மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. வங்கிகளில் அதிக பணம் இருப்பவர்களைக் குறி... மேலும் பார்க்க

சென்னை: தலைவலி சிகிச்சைக்குச் சென்ற பெண் மரணம் - முற்றுகையிடப்பட்ட மருத்துவமனை!

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரின் மனைவி பவானி. இவருக்கு திடீரென தலைவலி ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவானியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு... மேலும் பார்க்க