செய்திகள் :

Iran: "நண்​பர் ட்ரம்ப் அழைத்​தார்; அமெரிக்கா - ஈரான் போர் குறித்து ஆலோசித்தோம்" - பிரதமர் மோடி பதிவு

post image

ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

மத்திய கிழக்குப் போர் சூழல் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "அமெரிக்க அதிபரும் எனது நண்​பரு​மான டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்​தார்.

பல்​வேறு துறை​களில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​று​வது குறித்து ஆலோ​சித்​தோம். சர்வ​தேச விவ​காரங்​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்படு​வது குறித்து உறுதி மேற்​கொண்​டோம்.

மேற்கு ஆசியா நில​வரம் குறித்​தும் (அமெரிக்​கா- ஈரான் போர்) ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் பாது​காப்​பான, தடையற்ற கப்​பல் போக்கு​வரத்தை உறுதி செய்​வது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தினோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இதுதொடர்பாக பேசிய இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர், "அமெரிக்​கா, ஈரான் இடையி​லான மோதலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க பல்​வேறு நாடு​கள் முயற்சி செய்து வரு​கின்​றன.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

அந்த நாடு​களின் சமரச முயற்​சியை அமெரிக்கா வரவேற்​கிறது. இதே​போல இந்​தி​யா​வின் சமரச முயற்​சி​யை​யும் நாங்​கள் முழு ​மனதுடன் வரவேற்​கிறோம்.

அதிபர் ட்ரம்​பும் பிரதமர் மோடி​யும் செவ்​வாய்க்​கிழமை 40 நிமிடங்​கள் பேச்சுசுவார்த்தை நடத்​தினர். அப்​போது ஈரான் போர் மற்​றும் இந்​தி​யா-அமெரிக்கா இடையி​லான வர்த்​தகம் குறித்து முக்​கிய​மாக விவா​திக்​கப்​பட்​டது’’ என்​று கூறியிருக்கிறார்.

"சினிமாவில் இருக்கக்கூடிய அதே சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே.!"- குஷ்பு ஆவேசம்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அந்த பரப்புரையில் "வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்... மேலும் பார்க்க

தமிழகம் சந்தித்த தொங்கு சட்டசபைகள், விஜயகாந்த் வழியில் 'மைனாரிட்டி' ஆட்சிக்கு பாதை போடுகிறாரா விஜய்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருப்பதால் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன அரசியல் கட்சிகள்.தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப் போவது எந்தக் கட்சி? யார் முதல்... மேலும் பார்க்க

”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். இதற்காக பல மாவட்டங்களைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ர... மேலும் பார்க்க

வேஷ்டி - சட்டையில் பிரதமர் கோவையில் பிரசாரம் | Photo Album

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல்... மேலும் பார்க்க

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" - ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார். வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவ... மேலும் பார்க்க