செய்திகள் :

மகாராஷ்டிரா TET வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து; "இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயல்"- ராகுல்

post image

மகாராஷ்டிராவில் இன்று (ஜூன் 28) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), வினாத்தாள் கசிவு காரணமாக அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தானே பகுதியில் சில நபர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய செய்தி கிடைத்தது.

இதன் அடிப்படையில், சனிக்கிழமை அதிகாலையிலேயே பிவாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

சந்தேகம் எழுந்த ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த ரெய்டில், சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மகாராஷ்டிரா மாநில தேர்வு கவுன்சில் உயர் அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட தாள்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, அசல் வினாத்தாளில் இடம்பெறவிருந்த பல கேள்விகள், அங்கு சிக்கிய தாள்களிலும் அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த ராஜீவ் ஷா, ஆகாஷ் குமார் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த தீரஜ் குமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், முறைகேடு உறுதியானதால் இன்றைய தேர்வை ரத்து செய்வதாக தேர்வு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு நீட் வினாத்தாள் கசிவு ஆனதால் மறுதேர்வு வைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு. மீண்டும் ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முறை, மகாராஷ்டிராவின் TET தேர்வு.

நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையானது ஒட்டுமொத்தமாக ஒரு 'சுரண்டல் அமைப்பாக' மாற்றப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒவ்வொரு இளைஞரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பற்றதாக மாற்றியிருக்கிறது.

இது வெறும் வினாத்தாள் கசிவு மட்டுமல்ல, நம் இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயலாகும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் பற்றி எரியும் நேபாள் - தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிராகவே போராடும் Gen Z | என்ன காரணம்?

ஒரு தீப்பொறி ஒரு பெருங்காட்டை எரிப்பதற்கு போதுமானது என்பார்கள். அதுபோல, நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 25 வயது இளைஞர் ஒருவரின் தற்கொலை, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி, மக்கள் போராட்டத் தீயை மூட்டி... மேலும் பார்க்க

`இந்து ராஷ்டிரத்தால் யாருக்கும் ஆபத்தில்லை; நம் மூதாதையர் ஒன்றே'- ராம்தேவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை

'இந்து ராஷ்டிரா' என்ற கருத்தைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். "நம்... மேலும் பார்க்க

துணைவேந்தர் தேடல் : 'மாநில உரிமைகளைத் தமிழக அரசு தாரை வார்க்கக் கூடாது!' - அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான தமிழக அரசின் சட்டத் திருத்த முயற்சியை... மேலும் பார்க்க

`` `கொத்து புரோட்டா' என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..!" - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக... மேலும் பார்க்க

ஈரான் Hitlist-ல் இருக்கும் தலைவர்கள்: ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி... - ஈரானிய செய்தித்தாளின் லிஸ்ட்!

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இந்த நேரத்தில், ஈரானில் உள்ள 'ஹம்ஷஹ்ரி' என்னும் செய்தித்தாள் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பழி தீர்க்க ஈரான் குற... மேலும் பார்க்க