செய்திகள் :

"ஈரான் நாடே இருக்காது" - மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய ஈரான்- அமெரிக்கா; எச்சரிக்கைக்கும் ட்ரம்ப்

post image

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த 17-ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்குத் திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றபோது ஈரான், அக்கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.

சிங்கப்பூர் கப்பலைத் தாக்கிய ஈரான்|Represental images
சிங்கப்பூர் கப்பலைத் தாக்கிய ஈரான்|Represental images

தாங்கள் வழிகாட்டும் ஈரான் கடலோரப் பகுதி வழியாகத்தான் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க வேண்டும் என ஈரான் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவ விமானங்கள் ஹார்முஸ் ஜலசந்தியிலும் அதன் அருகிலும் உள்ள பல இடங்களில் 10 ஈரானிய ராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக அமெரிக்க மத்தியப் படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் ஈரான்- அமெரிக்க இடையேயான தாக்குதல்கள் தொடர்வதால் 2-வது நாளாகப் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் பதிவில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக, ஈரானின் ஏவுகணை, ட்ரோன்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

 ட்ரம்ப்
ட்ரம்ப்

ஈரான் தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை மீறினால், ஒரு கட்டத்திற்கு மேல் அமெரிக்காவும் பொறுமையாக இருக்காது.

ஏற்கனவே அமெரிக்கா தொடங்கிய ராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

மகாராஷ்டிரா TET வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து; "இளைஞர்களின் எதிர்காலத்தையே திருடும் செயல்"- ராகுல்

மகாராஷ்டிராவில் இன்று (ஜூன் 28) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), வினாத்தாள் கசிவு காரணமாக அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.தானே பகுதியில் சில நபர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் இருப்பதாக ம... மேலும் பார்க்க

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் ... மேலும் பார்க்க

`தவெக அரசு அமைய உழைத்தவர்கள் பொறுப்புகளில் இருப்பதில் என்ன தவறு?' - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார், நாடாளுமன்ற உ... மேலும் பார்க்க

Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில் இருந்தார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகக் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்... மேலும் பார்க்க

`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு' - சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி பெயரையும் குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஈரோ... மேலும் பார்க்க

"மாணவர்கள் அனைவரும் சமம்!" - பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளி மாணவர்களுக்கு சாதி பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்" என்று கூறியிரு... மேலும் பார்க்க