செய்திகள் :

மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது! - அண்ணாமலை

post image

இந்திய மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி மக்கள் 26 பலியானதன் விளைவாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9 ஆம் தேதிகளில் நள்ளிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

இதில், இந்திய தரப்பில் பொதுமக்கள் பலர் காயமடைந்த நிலையில், 2 பள்ளி மாணவர்கள் உள்பட 5-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதுபற்றி தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தற்போதைய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை பேசுகையில், “பாகிஸ்தான் அதனுடய நாடு அதன் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு நாட்டுக்குதான் ஒரு ராணுவம் தேவை. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தின்கீழ்தான் பாகிஸ்தான் அரசு செயல்பட்டு வருகிறது.

பலுசிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிதான் அவர்கள் நாட்டையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடன் வாங்கவில்லை என்றால், அவர்களுக்கு மின் வசதிக்குக்கூட பணமிருக்காது.

பாகிஸ்தான் பெரிய நாடு கிடையாது. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12-ல் ஒரு பங்குதான் இருக்கிறது பாகிஸ்தான். தொடர்ந்து இதுபோன்று மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவந்தால், உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது. பிரதமர் மோடி அறத்தின் அடிப்படையில் போரை நடத்தி வருகிறார்” என்றார்.

இதையும் படிக்க: பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்தியா: புதிய விடியோ

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை... மேலும் பார்க்க