செய்திகள் :

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

post image

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார்.

ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தார். அதோடு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்து வந்தார்.

ஆஷாவின் 11 வயது மகன் வீட்டில் தனியாக இருந்தான். அந்நேரம் வீட்டிற்கு வந்த மதுரா தனியாக இருந்த சிவாஜி(11) என்ற சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கிருந்த நீல கலர் டிரம்மில் வைத்து அதன் மீது துணியைப் போட்டு மூடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

வெளியில் சென்று இருந்த சிவாஜியின் சகோதரி சஜல் பிற்பகலில் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டி இருந்தது. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மின் விசிறியும், விளக்கும் எரிந்து கொண்டிருந்தது.

கொல்லப்பட்ட சிறுவன்
கொல்லப்பட்ட சிறுவன்

சிவாஜியையும் காணவில்லை. இதையடுத்து இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கதவைத் திறந்து உள்ளே தேடிப் பார்த்தபோது டிரம்மில் சிறுவன் சிவாஜி உடல் இருந்தது. அதிலேயே கொலைக்குப் பயன்படுத்திய கத்தியும் இருந்தது.

இது குறித்து சகோதரி சஜல் கூறுகையில், ''மதுரா பல ஆண்டுகளாக எனது அம்மாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூடி வந்தார். ஆனால் எனது அம்மா அதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு தக்கவிலை கொடுக்க வேண்டி வரும் என்று மதுரா மிரட்டி இருந்தார்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''கொலை நடப்பதற்கு முன்பு ஆஷாவிற்கும், மதுராவிற்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. ஆஷா வேலை செய்த கடைக்குச் சென்று மதுரா வாக்குவாதம் செய்துள்ளார்.

அங்கிருந்த கடை உரிமையாளர் எச்சரித்து அனுப்பி வைத்தார். அதன் பிறகுதான் நேராக வீட்டிற்குச் சென்று அங்கு தனியாக இருந்த சிவாஜியை மதுரா கொலை செய்துள்ளார்'' என்று தெரிவித்தனர்.

கொலை செய்துவிட்டு தலைமறைவான மதுராவைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவனது போன் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் போலீஸார் தேடிக் கண்டுபிடித்து அவனைக் கைது செய்தனர்.

விருதுநகர்: தேர்தல் கால ஆர்டர்; விதிமீறல், அதிக பணிச்சுமை! பட்டாசு ஆலை வெடி விபத்தில் நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. கடந்த 19-ம்... மேலும் பார்க்க

காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. என... மேலும் பார்க்க

காதல் மனைவிமீது சந்தேகம், வீடு முழுக்க கேமரா; இரண்டு மகள்களைக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா (48). இவர்களுக்கு 11 வயதில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பீகாரை... மேலும் பார்க்க

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க

180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலி... மேலும் பார்க்க