செய்திகள் :

'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

post image

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட். இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த ராஜினாமாவிற்கு இவர் சொன்ன காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கே நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும்.

அப்படி அவர் சொன்ன காரணம் என்ன?

"ஈரான் நமது தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தாலும், அமெரிக்காவில் சக்திவாய்ந்த லாபியாலும் தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

என்னால் மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது" என்று தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரான் போர்
ஈரான் போர்

அதிருப்தி..?

ஏற்கெனவே ட்ரம்ப் அரசாங்கத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஈரான் போரில் உடன்பாடில்லை என்கிற தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

ஆனால், ஒரு அதிகாரி நேரடியாக இந்தக் காரணத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறை. இதில் இவர் தனது பதவியை ராஜினாமா வேறு செய்துள்ளார்.

ஆக, இது ட்ரம்ப் அரசாங்கத்திற்குள்ளேயே ஈரான் போர் அதிருப்தியைக் கிளப்பியுள்ளதா என்கிற கேள்வி இப்போது வலுவாக எழுகிறது.

மேலும், ட்ரம்ப் இப்போதைக்கு இந்தப் போரை முடிப்பதாகவும் இல்லை.

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல். இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய அமெரி... மேலும் பார்க்க

``திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறத... மேலும் பார்க்க

"நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தேன்; எனக்கு எம்எல்ஏ ஆக விருப்பமில்லை!" - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,"விஜய் NDA கூட்டணியில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. தெரியாமல் கருத்து... மேலும் பார்க்க

Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

ஈரான் போர் தொடக்கத்தின் முதல் நாளிலேயே (பிப்ரவரி 28), அந்த நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொலை செய்யப்பட்டார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு தொடர்ச்சியாக கடும் எதிர்வினையாற்றி வந்தார் அலி ல... மேலும் பார்க்க

டிராபிக்கில் சிக்கிய அண்ணாமலை; உளறி கொட்டிய அதிமுக நிர்வாகிகள்.. கோவை தே.ஜ.கூ ஆர்ப்பாட்ட ரிப்போர்ட்!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரம் என்பதால் மாவட்டம் முழுவதும... மேலும் பார்க்க