செய்திகள் :

மனைவிக்கு பக்கவாதம்; சைக்கிள் ரிக்‌ஷாவில் 300 கி.மீ பயணம் - 70 வயது முதியவரின் காதல்!

post image

ஒடிசாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு சிகிச்சை கொடுக்க 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல பணமில்லாமல் சைக்கிள் ரிக்‌ஷாவில் அழைத்து சென்றது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் என்ற இடத்தில் வசிப்பவர் பாபு லோகர்(70). சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். அவரது வயதான மனைவி ஜோதிக்கு கடந்த நவம்பர் மாதம் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மருத்துவர்கள் ஜோதியை கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டாக்கிற்கு தனது மனைவியை ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. இதனால் தனது சொந்த சைக்கிள் ரிக்‌ஷாவில் மனைவியை கட்டாக் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பாபு முடிவு செய்தார்.

இது குறித்து பாபு லோகர் கூறுகையில், ''ஆம்புலன்ஸை வாடகைக்கு அமர்த்தி செல்லும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. எனவே எனது மனைவியை எனது சொந்த வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன்.

இதற்காக எனது வண்டியில் சில பழையை மெத்தையை போட்டு அதில் எனது மனைவியை படுக்க வைத்தேன். கடவுள் பெயரை உச்சரித்தபடி சைக்கிள் ரிக்‌ஷாவை ஓட்டினேன். தினமும் 30 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்வோம். அதன் பிறகு அங்குள்ள எதாவது ஒரு கடையோரம் இரவில் தங்கிக்கொள்வோம். 9 நாள் பயணம் செய்து கட்டாக் மருத்துவமனைக்கு சென்றடைந்தேன். அங்கு இரண்டு மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் சென்றபோலவே திரும்ப வந்தோம். திரும்ப வந்தபோது சைக்கிள் ரிக்‌ஷா மீது ஒரு வாகனம் மோதியது.

இதில் எனது மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டோம். அங்கு அவர்கள் எங்களுக்கு சாப்பாடு கொடுத்து இரவில் தங்கிக்கொள்ள இட வசதி செய்து கொடுத்தனர். காலையில் மீண்டும் சைக்கிள் ரிக்‌ஷாவில் எனது மனைவியை ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன். வழியில் எங்களை போலீஸார் பார்த்தனர். அவர்கள் எங்களை அவர்களது வாகனத்தில் அழைத்து செல்வதாக தெரிவித்தனர். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.

அவர்கள் கட்டாயப்படுத்தி பணம் கொடுத்ததால் வழிச்செலவுக்காக வாங்கிக்கொண்டோம். எனது வாழ்க்கையில் நான் இரண்டு பேரை காதலிக்கிறேன். அதில் எனது மனைவி முதலாமானவர். இரண்டாவது எனது சைக்கிள் ரிக்‌ஷா. இரண்டு பேரையும் நான் பிரியவே மாட்டேன்'என்று தெரிவித்தார்.

தள்ளாத வயதிலும் தனது மனைவியை 300 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துவிட்டு அழைத்து வந்த பாபுவின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை - கலங்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரிவால்டோ என பெயரிடப்பட்ட ஆண் யானை, காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்து. மனிதர்களுடனான பிணைப்ப... மேலும் பார்க்க

பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்

கீழே கிடந்த 360 கிராம் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்துக்கொடுத்த தூய்மைப் பணியாளர் பத்மா தான் கடந்த சில நாள்களாக வைரல். அவரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர். பத்மாவை நட... மேலும் பார்க்க

`தன் உயிரை தியாகம் செய்து..' - தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி பெண் ஊழியர்

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் கஞ்சன் பாய் என்ற பெண், சமையல் வேலை செய்து வந்தார். அவர் அங்கன்வாடியில் சமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 20 கு... மேலும் பார்க்க

`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி

வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்த... மேலும் பார்க்க

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உலகம் முழு... மேலும் பார்க்க

"மேதி என் தாய்": நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவி... மேலும் பார்க்க