செய்திகள் :

மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன?

post image

சட்டசபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணலில் அமைச்சர் மனோதங்கராஜிக்கு சீட் கொடுக்கக் கூடாது என தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக நேர்காணல் முடிந்து வெளியே வந்த திருவட்டாறு ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் கலை வெளிப்படையாகவே மீடியாக்களிடம் பேசினார்.

நேர்காணலில் நடந்தது குறித்து அதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், "பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட சுமார் 38 பேர் விருப்பமனு வழங்கியிருந்த நிலையில் நேர்காணலில் சிட்டிங் எம்.எல்.ஏ மனோதங்கராஜ், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டாறு வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்பிரைட், திருவட்டாறு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் உள்ப்பட 28 பேர் கலந்துகொண்டனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தியபோது டி.ஆர்.பாலு, துரைமுருகன், நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நேர்காணலில், 'வந்த அனைவருக்கும் சீட் கொடுக்க வாய்ப்பு இல்லை. உங்களில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு கட்சிப் பணி செய்து, உழைத்து வெற்றிபெற வைப்பீர்களா?' என முதல்வர் ஸ்டாலின் கேட்டார்.

அனைவரும் சரி எனச் சொன்னார்கள். உங்களுக்கு எதாவது ஆட்சேபனை இருந்தால் கூறுங்கள் என ஸ்டாலின் கேட்டார். முதலில் பேசிய ஜான்பிரைட், 'மனோதங்கராஜுக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அவர் அமைச்சரும் ஆகிவிட்டார். அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலைதான் இருந்தது.

கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அவரால் பயன் இல்லை. அவர் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறும்' எனச் சொன்னார். உடனே அங்கிருந்த நிர்வாகிகள் கைத்தட்டினர்.

அடுத்து பேசிய ஜான்சன், 'அமைச்சர் மனோதங்கராஜுக்கு சீட் கொடுக்க வேண்டும்' என்றார். பின்னர் பேசிய ஸ்டாலின், 'தொகுதியில் வளர்ச்சிப் பற்றி பேசலாம். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதுபற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றார்.

ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல்
ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல்

கிள்ளியூர் தொகுதிக்கான நேர்காணலின்போது, அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கவேண்டும் என நிர்வாகிகள் கேட்டனர். கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 18 பஞ்சாயத்துக்களில் 13-ல் தி.மு.க வென்றுள்ளது எனக் கூறியுள்ளனர்.

அப்போது பேசிய முதல்வர், 'கிள்ளியூர் கூட்டணியான காங்கிரஸ் வசம் உள்ளது. அரசிடம் அதிக நிதிபெற்றவர் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார். அவர்தாம் நம்மை அதிகமாக விமர்சித்தும் பேசினார். ஆனாலும், கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கிறது. பார்க்கலாம்' என ஸ்டாலின் பேசினார்.

அப்போது பாலூரைச் சேர்ந்த நிர்வாகி தேவா என்பவர், 'எப்படியும் காங்கிரசுக்குத்தான் கிள்ளியூரைக் கொடுக்கப் போகிறீர்கள்' எனக் கூறியுள்ளார். அவர் அப்படி பேசியதும்  முதல்வர் முன்னிலையிலே பிற நிர்வாகிகள் அவரை அடிக்கப் பாய்ந்துள்ளனர். பின்னர், வெளியே வந்த அவரைச் சில நிர்வாகிகள் தாக்க முற்பட்டனர்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

நாகர்கோவில் தொகுதிக்கான நேர்காணலின்போது முதலில் மாவட்டச் செயலாளரான மேயர் மகேஷ் பேச எழுந்திருக்கிறார். அப்போது, மாவட்டச் செயலாளர் பேசவேண்டாம் எனக்கூறி உட்கார வைத்தார் முதல்வர். 

முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியபோது இடைமறித்த ஸ்டாலின், 'கடந்த தேர்தலில் பா.ஜ.க-விடம் தோற்றுப்போகக் காரணம் என்ன?' எனக் கேட்டார். 'அவர்கள் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள்' எனச் சுரேஷ்ராஜன் பதில் சொன்னார்.

குளச்சல் தொகுதி நேர்காணலின்போது அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்" என்றனர்.

ஈரான் 'இதை' செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப்

இஸ்ரேல் ஈரானின் தலைவர்கள் மற்றும் எரிசக்தி ஆலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி ஆலைகளைத் தாக்கி வருகிறது. அப்படித் தான் நேற்று கத்தாரில் உள்ள எர... மேலும் பார்க்க

பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி ஆகும் துரைமுருகன் முதல் அப்செட்டில் மணியான மாஜி வரை! | கழுகார்

மீண்டும் களமிறங்கும் துரைமுருகன்!பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி...தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி, காட்பாடியில் அவருக்குப் பதிலாக... மேலும் பார்க்க

'இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! 'இப்படி' போராடுவோம்' - சிவா திலீபனுக்கு ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மே 17 இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். கடந்த 12-ம் தேதி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்த... மேலும் பார்க்க