செய்திகள் :

மன்னர் சார்லஸை முந்திய பிராண்ட் மதிப்பு: 15,000 கோடி சொத்துடன் கலக்கும் பெக்காம் தம்பதி!

post image

விளையாட்டு உலகிலும் பேஷன் உலகிலும் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் டேவிட் பெக்காம் மற்றும் விக்டோரியா பெக்காம் தம்பதி, தற்போது நிதித்துறையில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.

2026-ஆம் ஆண்டின் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலின்படி, இவர்களின் கூட்டுச் சொத்து மதிப்பு 1.185 பில்லியன் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் 15,155 கோடி ரூபாய்) எட்டியுள்ளது.

இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றிலேயே பில்லியன் டாலர் சொத்து மதிப்பைத் தொட்ட முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை முன்னாள் கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் பெற்றுள்ளார்.

இந்த அசாத்திய வளர்ச்சியால், பிரிட்டன் நாட்டு மன்னரான சார்லஸை விடவும் அதிக சொத்துக்களைக் கொண்டவர்களாக இந்தத் தம்பதி மாறியுள்ளனர்.

டேவிட் பெக்காம்

டேவிட் பெக்காமின் இந்த அசுர வேகப் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தொடங்கிய தொழில்களே முக்கியக் காரணம் ஆகும்.

அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில் அவர் இணை உரிமையாளராக இருக்கும் 'இண்டர் மியாமி கால்பந்து கிளப்' தற்போது சுமார் 1.45 பில்லியன் டாலர் மதிப்புடைய அணியாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த அணியில் இணைந்த பிறகு கிளப்பின் வணிக மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுதவிர, அடிடாஸ், ஹெச் அண்ட் எம், ஹியூகோ பாஸ் போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் பெக்காம் வைத்துள்ள நீண்ட கால விளம்பர ஒப்பந்தங்களும் அவருக்குத் தொடர்ந்து கோடிக்கணக்கில் வருவாயைக் கொட்டி வருகின்றன.

இந்த வெற்றிப் பயணத்தில் டேவிட்டிற்கு இணையாக விக்டோரியா பெக்காமும் தனது சொந்த உழைப்பால் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

டேவிட் பெக்காம்

ஆரம்பத்தில் பாப் இசைக்குழுவின் மூலம் புகழ்பெற்ற விக்டோரியா, பின்னர் பேஷன் மற்றும் அழகு சாதனத் துறையில் தடம் பதித்தார். பல ஆண்டுகள் கடனில் தவித்து வந்த அவரது பேஷன் பிராண்ட், சமீபகாலமாகப் பெரும் லாபத்தை ஈட்டத் தொடங்கியுள்ளது.

விளையாட்டு வீரர்களின் சொத்துப் பட்டியலில் ஃபார்முலா 1 உலகின் பெர்னி எக்லெஸ்டோனுக்கு அடுத்தபடியாக, பிரிட்டனின் இரண்டாவது பெரும் பணக்கார விளையாட்டு ஆளுமையாக பெக்காம் தம்பதி தங்களது பிராண்ட் மதிப்பை உலகளவில் நிலைநிறுத்தியுள்ளனர்.

LSG vs CSK: 'போய் வாடா...' - சென்னையின் Playoff கனவு இனி 'திக்.. திக்..' தான்! எப்படி வென்றது லக்னோ?

ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வருவதற்குச் சாதகமாக விளையாடி கொண்டிருக்கும்போது,சென்னை அணி மட்டும், "நீங்கள் எவ்வளவு உதவினாலும் நாங்கள் 6 அல்லது 7வது இடத்திலேயேதான் இர... மேலும் பார்க்க

வெகுண்டெழுந்த மும்பை; தொடர் தோல்வியில் பஞ்சாப்; தத்தளிக்கும் டாப்-4 கனவு - நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில் நேற்று (மே-14)நடைபெற்ற பஞ்சாப் vs மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை அணி. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவ... மேலும் பார்க்க

'கருப்பன் வரான் வழி மறிக்காதே!' - விராட் கோலியின் வெறியாட்டத்தில் வீழ்ந்த கொல்கத்தா!

இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி....RCB vs... மேலும் பார்க்க

'விராட் கோலியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!' - ரஜத் பட்டிதார் வியப்பு!

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. பெங்கள... மேலும் பார்க்க

கோலியின் கேட்ச்சை விட்டதுதான் தோல்விக்குக் காரணம்! – கேப்டன் அஜிங்க்யா ரஹானே வருத்தம்!!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய(மே 13) பரபரப்பான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. இந்த ... மேலும் பார்க்க

'எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை, ஏன்னா.!'- தொடரைவிட்டு வெளியேறியது குறித்து கலங்கிய சூர்யகுமார்

நேற்று ( மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. mi vs rcb பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால்... மேலும் பார்க்க