செய்திகள் :

LSG vs CSK: 'போய் வாடா...' - சென்னையின் Playoff கனவு இனி 'திக்.. திக்..' தான்! எப்படி வென்றது லக்னோ?

post image

ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வருவதற்குச் சாதகமாக விளையாடி கொண்டிருக்கும்போது,சென்னை அணி மட்டும், "நீங்கள் எவ்வளவு உதவினாலும் நாங்கள் 6 அல்லது 7வது இடத்திலேயேதான் இருப்போம்" என வீம்புடன் விளையாடி வருகிறது.

LSG vs CSK
LSG vs CSK

மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யலாம் என இருந்த நிலையில், நேற்று லக்னோ அணிக்கு எதிராக விளையாடியது சென்னை அணி. டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தார் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்.

இந்தச் சீசனில் சென்னை அணியில் எது மாறினாலும் பவர் பிளேவில் கெய்க்வாட் விக்கெட் விடுவது மட்டும் மாறவே இல்லை, ஆகாஷ் சிங் பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார்.

நடுவர்கள் போட்டியின் ஆரம்பத்தில் களத்தில் இறங்கும் பேட்ஸ்மேன்களிடம் பேட்டின் அளவு சரியாக இருக்கிறதா எனப் பரிசோதிப்பது போல், வீரர்களின் பேண்ட் பாக்கெட்டில் ஏதாவது துண்டு சீட்டு வைத்திருக்கிறார்களா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். அடிக்கடி எழுதி வைத்ததை எடுத்து எடுத்து காட்டுகிறார்கள்.

LSG
LSG

சஞ்சு சாம்சன் அடிப்பார் என எதிர்பார்த்து காத்திருக்க அவரும் 20(20) ரன்களில் அவுட் ஆக, கடந்த போட்டியில் அதிரடி காட்டிய உர்வில் பட்டேல் நான் சேப்பாக்கத்தில் மட்டும்தான் அடிப்பேன் என வந்த வேகத்தில் கிளம்பினார். அவ்வளவுதான் எனச் சென்னை ரசிகர்கள் தலையில் துண்டை போட கார்த்திக் சர்மா மற்றும் பிரேவிஸ் இணையினர் அதிரடி காட்டி, பாதாளத்தில் கிடந்த போட்டியை மீட்டு வந்தனர்.

அடுத்தடுத்து அவர்களும் அவுட் ஆகி வெளியேற ஷிவம் துபே வந்து வழக்கம் போல டெஸ்ட் மேட்ச் விளையாட ஆரம்பிதார். ஆனால் கடைசி ஒரு ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 187 என்ற நிலைக்கி உயர்தினார்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய லக்னோவின் தொடக்க ஆட்டகாரர்கள், கடந்த போட்டியில் எங்கு விட்டார்களோ அங்கிருந்தே தொடர்ந்தார்கள்.

கடந்த போட்டியில் ஜோஷ் இங்கிலிஷ், இந்தப் போட்டியில் மிச்சல் மார்ஷ்.

CSK
CSK

சென்னை அணியின் பந்து வீச்சுகளை அனைத்து ஸ்டாண்ட்களிலும் பறக்க விட்டு கொண்டிருந்தனர் லக்னோவின் ஓப்பனர்கள். 12வது ஓவரில்தான் கிடைத்தது அவர்களின் விக்கெட். முதல் விக்கெட் விழுவதற்குள் போட்டியே முடிந்து விட்டது, 188 என்ற இலக்கை 17வது ஓவரிலே எட்டி, சென்னையின் பிளே ஆப் கனவையும் சேர்த்து கிட்டத்தட்ட பறித்து விட்டது லக்னோ. புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்திற்கு நகர்ந்திருக்கிறது சென்னை அணி.

இனி வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் கனவு என இருக்கையில் அந்த இரண்டு போட்டியும் பீக்கில் இருக்கும் ஹைதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிரே என நினைக்கும்போது பிளே ஆப் கனவை அடியோடு மறந்து அடுத்த சீசனிற்கு தயாராக சென்று விட்டனர் சென்னை ரசிகர்கள்.

வெகுண்டெழுந்த மும்பை; தொடர் தோல்வியில் பஞ்சாப்; தத்தளிக்கும் டாப்-4 கனவு - நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில் நேற்று (மே-14)நடைபெற்ற பஞ்சாப் vs மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை அணி. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவ... மேலும் பார்க்க

'கருப்பன் வரான் வழி மறிக்காதே!' - விராட் கோலியின் வெறியாட்டத்தில் வீழ்ந்த கொல்கத்தா!

இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி....RCB vs... மேலும் பார்க்க

'விராட் கோலியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!' - ரஜத் பட்டிதார் வியப்பு!

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. பெங்கள... மேலும் பார்க்க

கோலியின் கேட்ச்சை விட்டதுதான் தோல்விக்குக் காரணம்! – கேப்டன் அஜிங்க்யா ரஹானே வருத்தம்!!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய(மே 13) பரபரப்பான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. இந்த ... மேலும் பார்க்க

'எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை, ஏன்னா.!'- தொடரைவிட்டு வெளியேறியது குறித்து கலங்கிய சூர்யகுமார்

நேற்று ( மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. mi vs rcb பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால்... மேலும் பார்க்க

Cricket: கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் மரணம்; விராட் கோலி, யுவராஜ் சிங் இரங்கல்!

இந்திய இளையோர் அணி (U-19) மற்றும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), சண்டிகரில் காலமானார். புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான கா... மேலும் பார்க்க