செய்திகள் :

கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

post image

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ எடுத்து, அம்மாணவியின் தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்ட 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோ
ஆபாச வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி வீட்டுக்கு அருகில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் குடும்பமும் வசித்து வந்தது.

அங்கு அடிக்கடி வந்த அம்மாணவனின் நண்பர்கள் இருவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்த மாணவியைத் தப்பான நோக்கத்தில் பார்த்து வந்த நிலையில், அம்மாணவியின் இன்ஸ்டா ஐடியைக் கண்டுபிடித்து அவரின் போட்டோக்களை டவுன் லோடு செய்துள்ளனர்.

பின்பு போலி பெயரில் ஒரு இன்ஸ்டா ஐடியை இவர்கள் உருவாக்கி, அந்த மாணவிக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளனர். அவர் அக்சப்ட் பண்ணியதும் டவுன்லோட் செய்து வைத்திருந்த மாணவியின் போட்டோக்களை, ஆபாசமாக மார்பிங் செய்து அவரின் இன்ஸ்டா ஐடிக்கு அனுப்ப அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.

'இந்தப் படங்களை மற்ற சோஷியல் மீடியாவில் பகிராமல் இருக்க வேண்டுமென்றால் ஆடையின்றி போட்டோ, வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்' என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன மாணவியும் அவர்கள் சொன்னதுபோல் நிர்வாணமாக படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார்.

உடனே அந்தப் படங்களை அம்மாணவியின் தந்தையின் வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பி, 'பத்து லட்சம் பணம் வேண்டும், இல்லையென்றால் சோஷியல் மீடியாவில் பகிர்வோம்' என்று 3 மாணவர்களும் மிரட்டியுள்ளனர்.

போக்சோ
போக்சோ

சுதாரித்த மாணவியின் தந்தை, தனக்கு படங்கள் அனுப்பிய மொபைல் எண் குறித்து விசாரித்தபோது, அது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாணவனின் எண் என்பது தெரிய வந்தது. அதோடு அவனைப் பிடித்து விசாரிக்க, தன் நண்பர்களுடன் சேர்ந்து இதைச் செய்ததாக ஒப்புக்கொள்ள, உடனே கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவிகளில் 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

பள்ளியில் படிக்கும் வயதில் இந்த மாணவர்களின் கிரைம் நடவடிக்கை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிய காரணமான புனே பேராசிரியர் கைது; சிக்கியது எப்படி? வெளியான பகீர் பின்னணி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாத தொடக்கத்தில் நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்தது. இது தேர்வு நடந்து முடிந்த பிறகுதான் வ... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை... அம்பத்தூரில் பயங்கரம்!

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும... மேலும் பார்க்க

திருவள்ளூர்: லிஃப்ட் கேட்ட பெண்ணுக்கு இருட்டில் பாலியல் தொல்லை... இளைஞரைத் தேடும் போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, பணி முடித்து விட்டு வீட்டுக்குச் செல்ல 40 வயதாகும் பெண் ஒருவர் ஆமூர் ஏரிக்கரை சாலை பகுதியில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட... மேலும் பார்க்க

அடுத்தடுத்து இரண்டு கொலைகள்; நாகையில் பரபரப்பு - நேரில் ஆய்வு செய்த எஸ்.பி!

நாகப்பட்டினத்தில் வெவ்வேறு இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை ரயில் நிலையம் அருகே உள... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மின்கசிவால் சிறுவன் உயிரிழப்பு; மின்சாரத் துறையின் அலட்சியமா? என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் 8 வயது மகன் உதய சுதர்சன். இச்சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிப்பிறை தெருவில் உள்ள ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: “யார் பெரிய ஆள்?" - மதுபோதையில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் கொடூரக் கொலை

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்னோவின். இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடியில் அம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த திருநங்கை ஒருவரைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள... மேலும் பார்க்க