செய்திகள் :

திருவள்ளூர்: லிஃப்ட் கேட்ட பெண்ணுக்கு இருட்டில் பாலியல் தொல்லை... இளைஞரைத் தேடும் போலீஸ்!

post image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, பணி முடித்து விட்டு வீட்டுக்குச் செல்ல 40 வயதாகும் பெண் ஒருவர் ஆமூர் ஏரிக்கரை சாலை பகுதியில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார். உடனே அந்த நபரும் அந்தப் பெண்ணை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். ஏரிக்கரை கோவில் அருகே சென்றபோது, அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்தி, அந்தப் பெண்ணை கீழே இறங்க கூறியிருக்கிறார். உடனே அவரும் இறங்க, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த இளைஞர், அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர், கத்தி முனையிலேயே பெண்ணை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த பெண், இளைஞருடன் போராடியிருக்கிறார்.

பாலியல் தொல்லை

இந்தச் சமயத்தில் அவ்வழியாக ஒரு பைக் வந்திருக்கிறது. அதைப் பார்த்த இளைஞர், பெண்ணை அங்கேயே விட்டு விட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார். அதன்பிறகு அந்தப் பைக்கில் வந்தவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறிய பெண் கதறி அழுதிருக்கிறார். அதனால் அந்தப் பெண்ணை பைக்கில் ஏற்றிக் கொண்ட அந்த நபர், பொன்னேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு அந்தப் பெண் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்றுவிசாரித்ததோடு பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞரை தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``சைனவரம் பகுதியில் இருந்து ஆமூருக்கு செல்லும் 3 கிலோமீட்டர் தூர ஏரிக்கரை வழி இருட்டாகவே உள்ளது. மேலும் ஆமூருக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால் ஆமூருக்கு செல்பவர்கள், அவ்வழியாக வரும் பைக், வாகனங்களில் லிஃப்ட் கேட்டு செல்வதுண்டு. இரவு நேரங்களில் ஏரிக்கரை பகுதியின் இருட்டை பயன்படுத்தி சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே சைனவரம், மாதவரம், தச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு போதிய வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு இருள் நிறைந்த ஏரிக்கரை சாலையில் போதிய மின்விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை... அம்பத்தூரில் பயங்கரம்!

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும... மேலும் பார்க்க

அடுத்தடுத்து இரண்டு கொலைகள்; நாகையில் பரபரப்பு - நேரில் ஆய்வு செய்த எஸ்.பி!

நாகப்பட்டினத்தில் வெவ்வேறு இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை ரயில் நிலையம் அருகே உள... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மின்கசிவால் சிறுவன் உயிரிழப்பு; மின்சாரத் துறையின் அலட்சியமா? என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் 8 வயது மகன் உதய சுதர்சன். இச்சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிப்பிறை தெருவில் உள்ள ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: “யார் பெரிய ஆள்?" - மதுபோதையில் இரு தரப்பினர் மோதல்; ஒருவர் கொடூரக் கொலை

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்னோவின். இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடியில் அம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த திருநங்கை ஒருவரைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் கோயில் இலவச லட்டு பிரசாதத்தில் ரூ.3.40 கோடி சுருட்டல் - ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்!

புனித தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தனியார் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த பிரசாத உரிமம் ... மேலும் பார்க்க

திருச்சி: சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகன்; ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது: 52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க