செய்திகள் :

திருச்சி: சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகன்; ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற தந்தை

post image

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது: 52). அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த 2014-ல் உடல்நலக் குறைவால் பணியை ராஜினாமா செய்தார்.

தற்போது, தனது மனைவி இளஞ்சியத்துடன் (வயது: 48) சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு பார்த்திபன் (வயது: 32) என்ற மகனும், பிரியா (வயது: 28) என்ற மகளும் இருந்தனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் பார்த்திபன் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார்.

இவருக்குத் தீவிரமான மதுப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மது அருந்தும் போதெல்லாம் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது பெற்றோர் மற்றும் தங்கையை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மகன்
கொலை செய்யப்பட்ட மகன்

மேலும், தனது வருமானம் குடிப்பதற்கே போதாததால், ஆன்லைனிலும், வெளிநபர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தனது தந்தை நடராஜனிடம் சொத்துகளை விற்றுப் பணம் தருமாறு போதையில் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், ஈரோட்டில் வேலை பார்த்து வந்த பார்த்திபன், மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது தாய் இளஞ்சியத்திடம் நிலத்தை விற்றுப் பணம் தருமாறு மிரட்டி, அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட நடராஜன், மகனைத் தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

ஆனால், மீண்டும் இன்று மாலை கடும் மதுபோதையில் வந்த பார்த்திபன், தந்தை நடராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நடராஜன், அருகில் இருந்த இரும்புக் குழாயை எடுத்துப் பார்த்திபனை அடிக்கத் துரத்தியுள்ளார். பயந்துபோய் தோட்டத்திற்குள் ஓடிய பார்த்திபனைத் துரத்திச் சென்ற நடராஜன், அவரது தலையில் பலமாகத் தாக்கினார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் இறந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த நடராஜன், உடனடியாக சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

accused

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சமயபுரம் போலீஸார், தந்தை நடராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதைக்கு அடிமையான மகன் தொல்லை தாங்க முடியாமல் தந்தையே மகனை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க