செய்திகள் :

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

post image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

மணிகண்டனின் கொடூர செயல் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளன. ஏமாற்றிய பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தது மட்டுமின்றி அதை ஆயுதமாகப் பயன்படுத்தி சம்மந்தப்பட்ட பெண்களைத் தனக்கும் தன்னுடைய நண்பர்களின் இச்சைக்கும் பாலியல் ரீதியாக பயன்படுத்தியதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

கைதான மணிகண்டன்
கைதான மணிகண்டன்

இது தொடர்பாக மணிகண்டன் மீது பெண் வன்கொடுமை, ஏமாற்றுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தவிர தடை செய்யப்பட்டுள்ள‌ குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக மணிகண்டன் மீது பல்வேறு இடங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் தான் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள மணிகண்டனுக்கும் த.வெ.க-விற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனச் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு; கொதித்தெழுந்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மூன்று வ... மேலும் பார்க்க

ஈரோடு: மதுபோதையில் லாரியால் மோதிச் சென்ற ஓட்டுநர் - துரத்திச் சென்று பிடித்த துணிச்சல் பெண்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒருவர், நேற்று மாலை ஸ்கூட்டியில் சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பு அருகில் சென்றுக் கொண்டிருக்கையில், பின்னால் வந்த லாரி ஒன்று பெண்ணின் ஸ்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் 3 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பீகாரை சேர்ந்த ஒருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது சிப்காட் பகுதி ஒன்று. அங்கு நேற்று மாலை ஒரு வட மாநிலத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் சென்றுள்ளது. அந்தக் குழந்தையை சிப்காட் பகுதி முழுவதும் தே... மேலும் பார்க்க

சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி

சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த த‌.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றிப் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங... மேலும் பார்க்க

மதுரையில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் முதல் வழக்கு; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க