செய்திகள் :

சட்டமன்றத்தில் விவிலய வசனங்களை வாசித்தது ஏன்? - விளக்கிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

post image

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 3 நாள்களுக்கு சட்டமன்றம் நடந்து முடிந்திருக்கிறது. புதிய சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் ஜே.சி.டி பிரபாகர் அவையில் பைபிள் வசனங்களையெல்லாம் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு வரவேற்பு விமர்சனம் என இரண்டு விதமான கருத்துகளும் கிடைத்திருந்தது.

JCD Prabhakar
JCD Prabhakar

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அழைத்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விவிலிய வாசகங்களை சபையில் வாசித்ததை குறித்தும் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியது, 'என்னை ஒரு பெரிய இடத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். என்னை யாரென அறிமுகப்படுத்துகையில் நான் யாரோ அப்படித்தானே என்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுதானே ஆத்மார்த்தமாக இருக்கும். மேலும் சபையில் நான் வாசித்த 'உனக்கு செய்யத்தக்க திராணி இருக்கும் போது செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே' 'உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறு.' போன்ற வசனங்கள் எல்லாருக்கும் பொதுவானதுதான். நம்மால் பிறருக்கு ஒரு காரியத்தை ஒரு உதவியை செய்ய இயலுமெனில் அதை செய்துவிட வேண்டும்.

JCD Prabhakar
JCD Prabhakar

அதேமாதிரி, நம்மை நேசிப்பைதைப் போலவே பிறரையும் நேசிக்க வேண்டும். இதெல்லாம் அனைவருக்குமான கருத்துதானே. 'ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.' இது என்னுடைய அனுபவத்தின் வழி கூறிய வசனம். 'நடுநிலைமை' பற்றி கூறும்போது பகவத் கீதை, பைபிள், குரான் என மூன்று மத நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களையும் எடுத்துப் பேசியிருந்தனே' என்றார்.

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ததைப் பற்றி பேசுகையில், 'அவையில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? இந்த நடைமுறை இனியும் தொடரும். அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் விஷயங்களும் அப்படியே நேரலையில் செல்வதை தவிர்க்க மட்டும் எதாவது செய்ய வேண்டும்' என்றார்.

த.வெ.க அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? | பின்னணி தகவல்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்று, இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற நிலையில், இதுவரையில் அவர்களுக்கு இலாகா ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதேநேரத்த... மேலும் பார்க்க

'59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த காங்கிரஸார், அமைச்சரவையில்..!'- எம்.பி மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் ... மேலும் பார்க்க

‘அதிமுக பிளவுபட நான் காரணமா?’ – லீமா ரோஸ் விளக்கம்

கோவை விமானநிலையத்தில் அ.தி.மு.க. எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுத... மேலும் பார்க்க

'அதிமுகவின் கொறடா விஜயபாஸ்கர்தான்!' - மனு கொடுத்த சி.வி.சண்முகம்; என்ன செய்யப்போகிறார் சபாநாயகர்?

அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், இன்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் சபாநாயகரை சந்தித்து தங்கள் அணி அறிவிக்கும் கொறடாவையே அங்கீகரிக்க வேண்டும் என கடிதம் கொடுத்திருக்கின்றனர். தலைமைச் செயல... மேலும் பார்க்க

'மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்!' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்... மேலும் பார்க்க