செய்திகள் :

'மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்!' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

post image

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.

இந்நிலையில் அரசின் தவறான நிர்வாகத்தால் சாமானிய மக்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசின் தவறே காரணம். மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது.

அரசின் தவறான நிர்வாகத்தால் சாமானிய மக்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றனர்" என்று சாடியிருக்கிறார்.

'59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த காங்கிரஸார், அமைச்சரவையில்..!'- எம்.பி மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் ... மேலும் பார்க்க

‘அதிமுக பிளவுபட நான் காரணமா?’ – லீமா ரோஸ் விளக்கம்

கோவை விமானநிலையத்தில் அ.தி.மு.க. எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுத... மேலும் பார்க்க

'அதிமுகவின் கொறடா விஜயபாஸ்கர்தான்!' - மனு கொடுத்த சி.வி.சண்முகம்; என்ன செய்யப்போகிறார் சபாநாயகர்?

அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், இன்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் சபாநாயகரை சந்தித்து தங்கள் அணி அறிவிக்கும் கொறடாவையே அங்கீகரிக்க வேண்டும் என கடிதம் கொடுத்திருக்கின்றனர். தலைமைச் செயல... மேலும் பார்க்க

`எடப்பாடிதான் எங்கள் தலைவர்; மாற்றுக் கருத்து இல்லை’ - வேலுமணி அணியில் இருந்து தாவிய கே.சி.வீரமணி

அ.தி.மு.க இரண்டாகப் பிளவுப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த... மேலும் பார்க்க

`உலகப் பொருளாதாரம் சரிவின் விளிம்பில்... 1970களை மிஞ்சும் பேரழிவு?' - சிங்கப்பூர் பிரதமர் எச்சரிக்கை

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பெருவழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் 1970-களில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியை விட மிக மோசமான 'ஸ்டாக்ஃபி... மேலும் பார்க்க