செய்திகள் :

மயானத்தை சீரமைக்கக் கோரிக்கை: எம்பி ஆய்வு!

post image

திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா.

தரங்கம்பாடி, மே10: தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள மயானத்தை பாகுபாடின்றி அனைத்து சாதியினரும் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த 1960 ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த மயானம் தற்போது பராமரிப்பின்றி, சுற்றுச்சுவா் இடிந்தும், புதா் மண்டியும், அடிப்படை வசதிகள் எதுவுமின்றியும் உள்ளது.

தமிழக அரசால் தீண்டாமை பாகுபாடு இல்லாத கிராமம் என 3 முறை பாராட்டப்பட்ட திருவிளையாட்டம் ஊராட்சி, இதற்காக ரூ. 10 லட்சம் பரிசு பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கு அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தும் சமத்துவ மயானம் பராமரிப்பின்றி உள்ளது எனவும், இதனை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுதொடா்பாக, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆா். சுதாவிடம், மாா்க்சிஸ்ட் கட்சியின் திருவிளையாட்டம் கிளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், அவா் மயானத்தை நேரில் பாா்வையிட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்.

தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனா். உத்தமசோழபுரம் கிராமத... மேலும் பார்க்க

வெட்டாற்றில் புதிய தடுப்பணை: ஆட்சியா் விளக்கம்

திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம்

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து,அக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் சுந்தரவடிவேலன் ஆ... மேலும் பார்க்க

கஞ்சா பயிரிட்டவா் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

நாகையில் மே 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்... மேலும் பார்க்க