செய்திகள் :

மயிலாப்பூரில் மலராத தாமரை - 'மீண்டும் மீண்டும்' தோல்வியில் தமிழிசை சௌந்தரராஜன்!

post image

2006-ம் ஆண்டில் இருந்து பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.

ஆனால், இதுவரை எந்தத் தேர்தலும் அவருக்குக் கைக்கொடுக்கவில்லை... சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரண்டிலுமே மக்கள் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி கனிமொழியை எதிர்த்து களம் கண்டார் தமிழிசை.

ஆனால், அந்தத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்று, நாடாளுமன்ற படிகள் ஏறினார்.

இதனையடுத்து, பாஜக தலைமை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழிசையை தெலங்கானா கவர்னர் ஆக்கி அழகு பார்த்தது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

2021-ம் ஆண்டு புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

ஆனால், 'ஆசை யாரைத் தான் விட்டது?' 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மார்ச் மாதம் தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

ராஜினாமாவிற்கு பின், சென்னை தெற்கு தொகுதியில் திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியனை எதிர்த்து போட்டியிட்டார்.

ஆனால், அதிலும் தமிழிசைக்கு மக்கள் கொடுத்தது தோல்வியைத் தான்.

இருந்தும், தமிழிசை தொடர்ந்து அரசியலில் சுழன்று வந்தார். இதன் விளைவாக, 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழிசைக்கு மயிலாப்பூர் தொகுதி கொடுக்கப்பட்டது.

மயிலாப்பூரில் பிராமணர்கள் மற்றும் மீனவர் சமூக வாக்குகளை மிக அதிகமாக நம்பியே அங்கே பாஜக களமிறங்கியது. ஆனால், அங்கே அந்த இரு சமூகங்களுக்கும் தவெக தான் சாய்ஸாக இருந்துள்ளது என்று களம் சொல்கிறது.

ஆக, தவெக-வை சேர்ந்த வெங்கட்ராமன் முதல் இடத்தையும், திமுக-வை சேர்ந்த த.வேலு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளார் தமிழிசை.

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க