செய்திகள் :

`மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி

post image

மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய்ய போதிய பொது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், அவற்றை நம்ப வேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர். மும்பை போன்ற நகரங்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுபவர்கள் அதிக அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு உள்ளூர் மொழியான மராத்தி தெரியாது.

ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு கட்டாயம் மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் அந்த விதி பெரிய அளவில் பின்பற்றப்படுவது கிடையாது. டிரைவர்கள் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கிவிடுகின்றனர். ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுவதில் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்தும், அவர்கள் மராத்தி கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் அரசின் கவனத்திற்கு வந்தது.

அமைச்சர் பிரதாப் சர்நாயக்

இதையடுத்து டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்கிறதா என்பது குறித்த சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் அளித்த பேட்டியில், ''மே ஒன்றாம் தேதியிலிருந்து ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களின் மராத்தி திறன் சோதிக்கப்படும். மாநிலம் முழுவதும் ஆர்.டி.ஒ அதிகாரிகள் இதற்கான சோதனையில் ஈடுபடுவார்கள். மராத்தி தெரிந்திருக்கவில்லையெனில், அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருக்கும் விதியைத்தான் அரசு அமல்படுத்துகிறது'' என்று தெரிவித்தார்.

அரசின் இந்த உத்தரவு ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. மராத்தி தெரியவில்லை என்பதற்காக லைசென்ஸை ரத்து செய்வது நியாயமற்றது என்றும் டிரைவர்களின் வாழ்வாதாரமாக லைசென்ஸ் இருக்கிறது என்றும் மும்பை டாக்ஸி யூனியன் தலைவர் சாலியன் தெரிவித்துள்ளார். சில டிரைவர்கள் கடன் வாங்கி ஆட்டோ மற்றும் டாக்ஸி வாங்கி இருப்பதாகவும், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டால் கடனை கட்டமுடியாத நிலை ஏற்படும் என்றும் டிரைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மராத்தி போர்டு

இதே போன்று மும்பையில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் மராத்தி பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள மலாடு போன்ற இடங்களில் கடைகளில் மராத்தியியில் பெயர் பலகை வைப்பதற்கு பதில் குஜராத்தியில் பெயர் பலகை வைத்துள்ளனர். இது குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதனால் குஜராத்தி பெயர் பலகையை மாற்றிவிட்டு மராத்தியில் வைக்கும்படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

`நினைவு குறைந்துவிட்டது' முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மூளை பக்கவாதம் - நண்பர் தகவல்

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி 1990களில் அதிக அளவில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். சச்சின் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் வினோத் காம்ப்ளி, மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசி... மேலும் பார்க்க

`பீஃப் உண்ணுங்கள்; நமாஸ் செய்யுங்கள்'- TCS-ல் மத மாற்ற முயற்சி; Undercover sketch-ல் சிக்கிய கும்பல்

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள்... மேலும் பார்க்க

கைநழுவிய வேட்டை... கால் நழுவிய சிங்கம்! 15 அடி ஆழக் கிணற்றில் ஒரு மணி நேரத் திக் திக்! | Viral Video

வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சி... மேலும் பார்க்க

`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!

இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் ப... மேலும் பார்க்க

சம்பளப் பிரச்னை; போர்க்களமாக மாறிய நொய்டா; போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்கள் கைது

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் மாருதி காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் அதிக அளவில் இருக்கின்றன. இதுதவிர நொய்டா மற்றும் காசியாபாத்தில் அதிக அளவில் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ப... மேலும் பார்க்க

டொனால்டு ட்ரம்ப்பின் சரச்சைப் பதிவு; படத்தை நீக்கியதற்கு விளக்கமளித்த ட்ரம்ப்

அமெரிக்கா மத்திய கிழக்கில் உள்ள ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டன. இஸ்ரேலும், அமெரிக்காவும் இப்போரில் பின்னடைவைச் சந்தித்ததாகவே உலக நாடுகள் கருதுகின்றன. மற்றொருப... மேலும் பார்க்க