செய்திகள் :

`மருத்துவமனைக்கு வெள்ளை கோட்டுடன் சென்றதற்கு காரணம் இதுதான்!' - தவெக நிர்வாகி வாசுதேவி விளக்கம்

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி தனியார் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி நிர்மல் (29) என்பவரின் கை இயந்திரத்தில் சிக்கித் துண்டானது. அதையடுத்து, உடனடியாக நிர்மல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தவெக தென்காசி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வாசுதேவி என்பவர், மருத்துவமனைக்கு வெள்ளை நிறக் கோட்டுடன் ஆய்வு மேற்கொள்ளச் சென்றதாகச் சர்ச்சை வெடித்தது. அமமுக பொதுச் செயலாளர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

வாசுதேவி

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வாசுதேவியைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “நான் தென்காசி வடக்கு மாவட்ட தவெக மருத்துவ அணி அமைப்பாளராகச் செயல்பட்டு வருகிறேன். குவாரி விபத்தில் தொழிலாளியின் துண்டான கை, மேல் சிகிச்சைக்கு வெறும் மஞ்சள் பையில் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவின. அது குறித்து அறிந்துகொள்ளவே, மாவட்டச் செயலாளர் மாரியப்பனின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியினருடன் மருத்துவமனைக்குச் சென்றேன்.

ஆய்வுக்காகச் செல்லவில்லை. நான் முதுநிலை செவிலியர் பட்டப்படிப்பு, MBA மருத்துவமனை மேலாண்மை மற்றும் 15 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் உள்ளவர் என்பதால், மருத்துவமனைக்கு வெள்ளை நிறக் கோட்டுடன் சென்றேன்” என்றார்.

வாசுதேவி

மேலும், இது குறித்துச் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செந்தில் சேகரிடம் கேட்டபோது, “இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தொழிலாளிக்கு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் துண்டான கை, முறையான மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகளின்படி ஐஸ் பெட்டியில் பதப்படுத்தப்பட்டு, மஞ்சள் நிற மருத்துவ உயிரி கழிவுப் பையில் (Bio-medical waste bag) பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது” எனக் கூறினார்.

59 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்; `அந்த' 2 எம்.எல்.ஏ-க்கள் யார்?!

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாகப் பங்கேற்கிறது. நாளை (வியாழக்கிழமை) நடைபெறவ... மேலும் பார்க்க

`விசிக... காங்கிரஸ்... ஐ.யு.எம்.எல்' - விஜய் போடும் கணக்கு; அமைச்சரவை பட்டியல் தயார்!

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசில் கூட்டணியாக இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள், வி.சி.கவு-வுக்கு ஓர் இடம் என அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து த.... மேலும் பார்க்க

திடீர் ஆய்வுகள்: ``தவெக உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?" - டிடிவி தினகரன் கேள்வி!

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய அரசின் செயல்பாடுகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் நடவ... மேலும் பார்க்க

ஜார்ஜியா மெலோனி: "நீ ரொம்ப குண்டா இருக்க" - அரசியலுக்கு வித்திட்ட அந்த சம்பவம் - சுவாரசிய தகவல்கள்!

இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni). 2022-ம் ஆண்டு இத்தாலியின் பிரதமராகப் பதவியேற்ற இவரது வாழ்க்கை, பல சவால்களும், போராட்டங்களும், சுவார... மேலும் பார்க்க

`தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான் பந்துபோல திமுக Bounce Back ஆகும்!' - ஸ்டாலின்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் ... மேலும் பார்க்க