செய்திகள் :

மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம்!

post image

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேரா தம்பதியின் மகன் ரைஹான் வதேராவிற்கு அவரது நீண்ட கால தோழி அவிவா பைக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ரைஹான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் ரைஹான் தனது வருங்கால மனைவி அவிவா பைக்குடன் இருக்கிறார். அந்த படம் திருமணம் நிச்சயதார்த்ததில் எடுத்தது ஆகும். மற்றொரு படம் இருவரும் குழந்தை பருவத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்டது ஆகும்.

இதன் மூலம் இருவரும் குழந்தை பருவத்தில் இருந்தே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இருவரும் பள்ளியிலே சேர்ந்து படித்து இருக்கின்றனர். அவிவாவின் தாயாரும், பிரியங்கா காந்தியும் நீண்ட கால தோழிகள் ஆவர். ரைஹான் இன்ஸ்டாகிராமில் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டவுடன் அவரது நண்பர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்போரேயில் தனிப்பட்ட விழாவாக நடந்தது. இதில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண நிச்சயதார்த்தத்தில் ரைஹான் மற்றும் அவிவா இந்திய பாரம்பரிய உடையணிந்து காணப்பட்டனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரைஹான் குடும்பமும், அவிவா குடும்பமும் டெல்லியில் கூடியது. இதில் ரைஹான் முறைப்படி இரு குடும்பத்தினர் முன்னிலையில் அவிவாவிடம் தனது காதலை தெரிவித்தார்.

அதனை அவிவா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து 29ம் தேதி அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியிருக்கிறது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. 25 வயதாகும் ரைஹான் தனது 10 வயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சொந்தமாக புகைப்பட கண்காட்சிகளைக்கூட நடத்தி இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் அவிவா இன்டீரியர் டிசைனர் மற்றும் புகைப்பட கலைஞர் ஆவார். அவிவாவின் தாயாரும் இன்டீரியர் டிசைனர் ஆவார்!

41 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டவர்; அம்மாவை தேடி நாக்பூர் வந்துள்ள நெதர்லாந்து மேயர்!

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹீம்ஸ்டேட் என்ற நகரத்தில் மேயராக இருப்பவர் பால்குன் பின்னன்டைக். கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு பால்குன் திருமணமாகாத பெண் ஒருவருக்கு நாக்பூரில் பிறந்தார். அவர் பிறந்த 3 நாட்களி... மேலும் பார்க்க

பொங்கல் தினத்தில் மாநகராட்சி தேர்தல்: மும்பை தாராவியில் பொங்கல் விழாவை ரத்து செய்த தமிழ் அமைப்புகள்!

மும்பை தாராவியில் ஒவ்வோர் ஆண்டும் 90 அடி சாலையில் 2000 பெண்கள் கூடி ஒரே இடத்தில் பொங்கலிடுவது வழக்கம். இந்து அமைப்புகள், தமிழ் சங்கங்கள், அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த பொங்கல் விழாவை நடத்துவது வழக்கம... மேலும் பார்க்க

45 சவரன் தங்க நகைகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண்; நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி உரிமையாளர்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான திருமதி பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்ததற்காக, லலிதா ஜுவல்லரி உரிமையாளர் டாக்... மேலும் பார்க்க

`புதிய சிந்தனைகளை வரவேற்போம்' ஜிவாமே ஷோரூமில் பொங்கல் கொண்டாட்டம் - நடிகை மேகா ஆகாஷ் பங்கேற்பு

பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியோடு நவீன பேஷனையும் இணைத்து,இந்தியாவின் நம்பர்1உள்ளாடை நிறுவனமான ஜிவாமே,சென்னை பீனிக்ஸ் மார்கெட்சிட்டி மாலில் உள்ள தனது ஷோரூமில் உற்சாகமான கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த வி... மேலும் பார்க்க

போகி பண்டிகை கொண்டாட்டம்: சென்னையின் காலை பொழுது! | Bhogi Clicks

போகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைபோகி பண்டிகை | சென்னைவ்போகி பண்டிகை | சென்னை... மேலும் பார்க்க