செய்திகள் :

மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!

post image

'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர் மனைவி மிஷேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், பிரபலங்கள் வசிக்கும் பிரெண்ட்வுட் என்ற பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இந்தப் பகுதியிலிருந்து அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்திருக்கிறது. உடனே காவல்துறையும், தீயணைப்புத் துறையும் அழைப்பு வந்த பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுதான் இயக்குநர் ராப் ரெய்னரும், அவரின் மனைவி மிஷேலும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இயக்குநர் ராப் ரெய்னர்
இயக்குநர் ராப் ரெய்னர்

லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர், ``லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையின் கொள்ளை மற்றும் கொலைப் பிரிவு துப்பறிவாளர்கள் அந்த வீட்டிற்குச் சென்று, கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்." என்றார்.

ராப் ரெய்னரின் குடும்ப செய்தித் தொடர்பாளர் அமெரிக்க ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், ``மிஷேல் மற்றும் ராப் ரெய்னரின் துயர மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறோம்.

இந்தத் திடீர் இழப்பால் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை அவர்கள் கொலை செய்யப்பட்ட விதம், அல்லது கொலைக்கான காரணம் என எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை. மேலும், இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய யாரையும் கைது செய்யவில்லை.

இது குறித்துப் பேசிய காவல்துறை, ``மரணத்திற்கான காரணம் லாஸ் ஏஞ்சல்ஸ் பிரேதப் பரிசோதனை அலுவலகத்தால் ஆராய்ந்து அறிவிக்கப்படும். அதுவரை ஒத்துழைக்க வேண்டும்." எனக் கேட்டிருக்கிறது.

சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!

சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்... மேலும் பார்க்க

Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே ... மேலும் பார்க்க

`பைனான்ஸ்' வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் - நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார்... மேலும் பார்க்க

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொத... மேலும் பார்க்க

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்... மேலும் பார்க்க