செய்திகள் :

மாணவர்கள் கையில் கயிறு: "இந்தச் சமூகத்திற்கு இந்தக் கலர் எனத் தூண்டிவிடுகிறார்கள்" - ராஜ்மோகன்

post image

மதுரை காந்தி அருங்காட்சியத்தில் அருங்காட்சிய புனரமைப்பு பணிகள் நடைபெற்ற பகுதியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “மதுரையில் அரசுப் பொருட்காட்சியைத் தொடங்கி வைக்க வந்துள்ளேன். பள்ளிவளாகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் உள்ள நிலையில், போதைப்பழக்கம் என்பது குற்றங்களின் தாய்மடியாக உள்ளது.

எங்களது ஆட்சி வந்தவுடன் இதுவரை 1638 குற்றவாளிகள் கைது, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பிடிவாரண்ட் என 4 ஆயிரம் குற்றவாளிகளை சிறையில் அடைக்கவுள்ளோம்.

கடந்த 5 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அந்தந்த மாவட்டங்களில் கொட்டி அழிக்கப்படுகின்றன. போதையில்லா தமிழ்நாடு என்பது நம்முடைய இலக்கு. முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தமிழகத்தில் போதைக்கலாசாரம் வேரோடு அகற்றப்படும்.

காலி பணியிடங்களை எவ்வளவு வேகமாக நிரப்புவோமோ அதனை நிரப்புவோம், சில பிரச்னைகள் நீதிமன்றத்தில் உள்ளன; சில பிரச்னைகள் பேசவேண்டியுள்ளன. போர்களே பேசி முடிக்கும்போது பள்ளிக்கூட பிரச்னை முடிக்க முடியாதா?

மாணவர் கைகளில் சாதிக்கயிறு
மாணவர் கைகளில் சாதிக்கயிறு

717 டாஸ்மாக் கடைகள் மூட அடிப்படை காரணம் பள்ளிகளுக்கு அருகில் இருப்பதால்தான். பள்ளி செல்லும் வழியில் என்ன இருக்கிறதோ, அதனைப் பார்த்து மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள். எனவேதான் பள்ளி அருகே இருந்த மதுபான கடைகள் அகற்றப்பட்டன.

இது தொடக்கம் மட்டும் தான் இன்னும் வரக்கூடிய காலகட்டங்களில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபான கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி நிலையங்களுக்கு அருகில் டாஸ்மாக் இருந்தால் நிச்சயமாக அவை அகற்றப்படும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஒரு சில இடங்களில் சென்சிட்டிவாக சாதிய மோதலைத் தூண்டி விடுகிறார்கள். இந்தச் சமூகத்திற்கு இந்தக் கலர் என வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார்கள். அதனை அனுமதிக்கக் கூடாது.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

ஏற்கனவே என்ன நடைமுறையில் இருந்ததோ, அது தொடரும். நானே குங்குமம், விபூதி வைத்துதான் பள்ளிக்குச் செல்வேன். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அரசுப் பள்ளிகளில் சேர்க்க விகிதம் தனியார் பள்ளிக்கு நிகராக உள்ளது. அதனை இன்னும் கூடுதல் படுத்தவுள்ளோம்” என்றார்

`ட்ரம்ப் பிறந்த நாளில் கூடாது' - அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அறிவிக்க நள்ளிரவு வரை இழுத்தடித்த ஈரான்

அமெரிக்கா, ஈரான் இடையேயான போர்நிறுத்த பேச்சுவார்த்தை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு பிரச்னையில் பேச்சுவார்த்தை தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு த... மேலும் பார்க்க

மம்தா கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் `தேசியவாத மக்கள் கட்சி' எனும் கட்சியில் இணைய முடிவு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக 60 எம்.எ... மேலும் பார்க்க

'வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் இன்று.!' - உதயநிதி காட்டம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வரு... மேலும் பார்க்க

ஈரான் அமைதி ஒப்பந்தம் முடிவாகிறதே... ஹார்முஸ் நீர்ச்சந்தி எப்போது திறக்கப்படும்? சுங்க வரி உள்ளதா?

ஈரானில் போர் தொடங்கியது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உலக நாடுகளை நேரடியாகப் பாதித்த ஒன்று - ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல். இதனால், எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்ச... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் - உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம்

ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு... மேலும் பார்க்க

'தமாகா கட்சியை விட்டு விலகுகிறேன்; விலகினாலும்.!' - மாநில பொதுச் செயலாளர் யுவராஜா உருக்கம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜா தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் தமாகா கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ... மேலும் பார்க்க