`தினம் 300 ரூபாய் சேர்ந்தா போதும்; நானும், மனைவியும் சந்தோஷமா இருப்போம்!' - 2 ரூ...
ஓமனில் உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் - உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம்
ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நிஷாந்தின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ஓமனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாகக் கூறி உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, உடற்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் அங்குள்ள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உடற்கூறு ஆய்வு நிறைவடைந்த பின்னர் இந்திய தூதரகம் மூலமாக நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழக அரசின் செலவில் நிஷாந்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.













