செய்திகள் :

"மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர..." - செல்வப்பெருந்தகை

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.

இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

மாணிக்கம் தாகூர் எம். பி
மாணிக்கம் தாகூர் எம். பி

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், "அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜன.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார்.

"இந்திய கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதை அசைத்துப் பார்ப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் யாராலும் அசைக்க முடியாது.

ஒவ்வொருவரும் கருத்து சொல்வதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் இருக்கிறது.

நான் ஒரு தலைவராக இருந்துகொண்டு பொதுவெளியில் பேச முடியாது. சீட் வேண்டும், நினைப்பது கிடைக்க வேண்டும் என்றால் கேட்க வேண்டியவர்களிடம் கேட்க வேண்டும். மீடியா முன்பு கேட்டால் கிடைக்குமா?

மாணிக்கம் தாக்கூர் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை

எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை தெளிவாக இருக்கிறது.

நாங்கள் தி.மு.க-வைத் தவிர எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஸ்டாலின் ஆகியோர் கூட்டணி குறித்துப் பார்த்துக்கொள்வார்கள்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான இடங்களை நாகரிகமாகக் கேட்டுப் பெறுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ள... மேலும் பார்க்க

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED - நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிர... மேலும் பார்க்க

பாமக : `நான்முனையிலும் முட்டுக்கட்டை' - ராமதாஸ் முன் இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக திட்டமிட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு அடைக்கல இடம் கிடைக்கும் என்றச் சூழலில் தனித்து விடப்பட்ட... மேலும் பார்க்க