செய்திகள் :

மிதுன் விவகாரம்: “எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறுதான்” - அதிமுக ராஜ் சத்யன்

post image

`அதிமுக இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கொண்டு வர வேண்டும்' என்ற கோரிக்கை கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள ராஜ் சத்யன், “அரசியலில் இல்லாதவர்களையும், கழகப் பொதுச்செயலாளரின் குடும்பத்தினரையும் தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. கழகத்திற்கு எதிரான ஒரு ‘நேரேட்டிவ்’ உருவாக்கப்படுவதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் தொடங்கிய இந்த விவாதம் தற்போது பத்திரிகைகள் மற்றும் ஊடக விவாதங்களுக்கும் பரவியிருப்பது வேதனைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ் சத்யன்
ராஜ் சத்யன்

தேர்தல் பின்னடைவு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உட்கட்சி நிகழ்வுகள் மற்றும் கழகத் தொண்டர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைகள் என பல்வேறு சவால்களை கட்சியினர் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் அது தவறுதான்” என்று தனது பதிவில் ராஜ் சத்யன் வலியுறுத்தியுள்ளார்.

மிதுனை ஐடி விங் செயலாளராக நியமிக்க வேண்டும் என சமூகவலைத்தளத்தில் பலர் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான் என்ற ராஜ் சத்யனின் கருத்து கவனம் பெற்றுள்ளது. !

மிதுனை முன்னிறுத்தும் பதிவுகள்

`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - அண்ணாமலை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தொடர்ந்து சட்ட ஒழுங்கு சிக்கல்கள் நீடிப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆரவலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் விஜய் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறை அ... மேலும் பார்க்க

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்... மேலும் பார்க்க

‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆத... மேலும் பார்க்க

`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவ... மேலும் பார்க்க

`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா. உலகமே உற்றுநோக்கும் அந்த மேடையில் சிறப்பு விருந்தினராகப் பேச வருகிறார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி ... மேலும் பார்க்க