செய்திகள் :

மின் இணைப்பு: திருப்பூர் மேயருக்கு ரூ.42,500 அபராதம் - மின்வாரியம் நடவடிக்கை ஏன்?

post image

திருப்பூர் தெற்கு கே.என்.பி. சுப்பிரமணிய நகரில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த வீட்டைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக தற்காலிக மின் இணைப்புக் கேட்டு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தினேஷ்குமார் மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அதற்குரிய கட்டணம் ரூ.16,935-த்தையும் மேயர் தினேஷ்குமார் தரப்பில் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், வீடு புதுப்பிக்கும் பணிக்கு ஏற்கெனவே இருந்த வீட்டு மின் இணைப்பையே தினேஷ்குமார் பயன்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் தினேஷ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, முன்னிருந்த வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தி புதுப்பிப்பு பணிகள் செய்யப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் பயன்படுத்திய மின்சாரத்துக்காக ரூ.42,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மேயர் தினேஷ்குமார்
திருப்பூர் மேயர் தினேஷ்குமார்

இதுகுறித்து மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சுமதி கூறுகையில், “கடந்த 8-ஆம் தேதியே மேயர் தினேஷ்குமார் தற்காலிக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய தரப்பில் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வீட்டு இணைப்பை பயன்படுத்தியதால், அவர் பயன்படுத்திய மின்சாரத்திற்கான தொகை விதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேயர் தினேஷ்குமார் கூறும்போது,

“வீட்டைப் புதுப்பிக்கும் பணி மேற்கொண்டுள்ளேன். அதற்காக கடந்த அக்டோபர் மாதம் மின் இணைப்புக் கேட்டு மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தேன். அவர்கள் 8-ஆம் தேதி டிமாண்ட் கோரியிருந்தனர்.

நான் அக்டோபர் 13-ஆம் தேதி அதற்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டேன். எனினும் தற்காலிக மின் இணைப்பை வழங்கவில்லை. இந்நிலையில் வீடு புதுப்பிக்கும் பணிக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு தொகையை செலுத்தும்படி தெரிவித்தனர். அந்த தொகையை நான் செலுத்தினேன்,” என்றார்.

நாம் தமிழர் : 'சாட்டை துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை?' - பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பிரமுகரும் கொள்கைப் பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனின் பெயர் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்கிறார்கள் உட்கட்சி விவரமறிந்த சிலர்.நாம் தம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `மாநில அரசின் மனு தள்ளுபடி' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு விவரம்

திருக்கார்த்திகை தினமான நேற்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிள... மேலும் பார்க்க

தேதி குறித்த திருமா; 234 மா.செ-க்கள்; மறுசீரமைக்கப்படும் வி.சி.க? - பரபரக்கும் அம்பேத்கர் திடல்!

2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் ஏற்றப்படாத தீபம்; வெடித்த ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தத... மேலும் பார்க்க

`தாயுள்ளம் கொண்ட தாயுமானவராக முதல்வர்; இதுவே திராவிட மாடல் ஆட்சி!' - அமைச்சர் ராமச்சந்திரன்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "யார் நமக்கு நல்லது செய்க... மேலும் பார்க்க