செய்திகள் :

மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணியின் நிழல் - பின்னணி என்ன?

post image

கோவை அரசியல் களத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்க முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அவரின் களப்பணி அதிமுகவுக்கு மிகப்பெரிய பிளஸ்.

வேலுமணி

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கோவை அதிமுக சீனியர் நிர்வாகிகள் திமுக மற்றும் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில்  கோவை அதிமுக முக்கிய நிர்வாகியாக இருந்து, பிறகு விலகிய சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

வேலுமணியின் நிழலாகவும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் சந்திரசேகர் இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அதில் டெண்டர், கமிஷன் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை டீல் செய்தவர். கோவை வடக்கு தொகுதியை குறிவைத்து பணியாற்றினார்.

சந்திரசேகர்

இவரின் மனைவி ஷர்மிளாவை கோவை மாநகராட்சி மேயராக்க முயற்சி செய்தார். நாளடைவில் சந்திரசேகரின் செயல்பாடுகளில் ஏராளமான புகார்கள் எழுந்தது. கட்சி, நிதி உள்ளிட்டவற்றில் அவர் வேலுமணியை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்தது.

சந்திரசேகரை தன் தம்பி என்று அடையாளப்படுத்திய வேலுமணி, அவரை ஒதுக்கி வைத்தார். கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சந்திரசேகர், கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவில் இருந்து விலகினார். தொடர்ந்து அவர் திமுக அல்லது பாஜகவில் இணைய போகிறார் என்று கூறப்பட்டது.

வேலுமணியுடன் சந்திரசேகர்

ஆனால் அதற்கான முயற்சிகள் கைகூடவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் சந்திரசேகர் மீண்டும் வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த சில ஆண்டுகளாகவே சந்திரசேகருக்கான பவரை வேலுமணி பறித்துவிட்டார். அதிமுகவில் தனக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்துதான் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அதிமுக – பாஜக கூட்டணியால், அவரால் பாஜகவில் இணைய முடியவில்லை.

சந்திரசேகர்

திமுகவிலும் அவரை ஏற்கவில்லை. தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்பதை சந்திரசேகர் உணர்ந்தார். இதனால் மீண்டும் அதிமுகவில் இணைய வேலுமணிக்கு தூதுவிட்டார். அவரை கட்சியில் இணைக்க வேலுமணிக்கு விருப்பம் இல்லை.

அதேநேரத்தில் வேலுமணியின் ரகசியங்களையும் சந்திரசேகர் நன்கறிவார். அவர் மூலம் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பளித்து விட கூடாது என்பதற்காக அவரை இணைத்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவர் மீண்டும் ஆக்டிவாக தொடங்கியுள்ளார். விரைவில் கோவை வடக்கு தொகுதிக்கு விருப்ப மனு அளிக்கவுள்ளார்.

வேலுமணி

இருப்பினும் வேலுமணிக்கு ஒருமுறை ஒருவர் மீது தவறான பிம்பம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மாட்டார். அதனால் அதிமுகவில் அவரின் இரண்டாவது இன்னிங்ஸில் பழைய செல்வாக்கு,  கிடைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.” என்றனர்.

'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்' டார்கெட்

பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.இந்த நிலையில், ராமதாஸ் வீட... மேலும் பார்க்க

"தவெக-விற்குச் செல்ல செங்கோட்டையனை நான் தூண்டிவிட்டேனா?" - டிடிவி தினகரன் சொல்வது என்ன?

அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.டிடிவி தினகரன்அப்போது, "அரசியல் ரீதியாக எது நடந்தாலும் என... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின்மீது வெறுப்புணர்ச்சி; பாஜக ஆதரவாளர்களே, ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள்!’ - ஸ்டாலின்

திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞர் திடலில், ரூ.2,095 கோடியில் முடிவுற்ற 314 பணிகளைத் திறந்துவைத்தல், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முதலமைச்சர் மு.... மேலும் பார்க்க

``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சித்த ஸ்டாலின்

திருவண்ணாமலையில் இன்றைய தினம், வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், ``நிலத்தில் நீரை பாய்ச்சியும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்

மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.அதே சமயம் இதே க... மேலும் பார்க்க