செய்திகள் :

மீண்டும் சர்வதேச டென்னிஸ் மேடையாகும் சென்னை... நவம்பரில் தொடங்குகிறது WTA 250!

post image

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில், வரும் நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை WTA 250 சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும், மொத்தத்தில் மூன்றாவது முறையாகவும் நடைபெறும் இந்தப் போட்டிக்காகத் தமிழக அரசு ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில், உலகின் முதல் 100 தரவரிசை வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பங்கள்!

இந்த ஆண்டு முதன்முறையாக மூன்று போட்டி மைதானங்களிலும் 'Electronic Line Calling' தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும், சர்வதேச தரத்துக்கு ஏற்ப நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

WTA 250

எதிர்காலத்தில் ஆடவர் ஏடிபி தொடர் கொண்டுவர முயற்சி!

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறைச் செயலர் சந்தீப் நந்தூரி, "போட்டிக்காகத் தமிழக அரசு ₹10 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், மைதானத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதுடன், எதிர்காலத்தில் ஆடவர் ATP டென்னிஸ் தொடரையும் தமிழகத்துக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

தமிழக டென்னிஸின் எதிர்காலம்: விஜய் அமிர்தராஜ் நம்பிக்கை!

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறுகையில், "சர்வதேச போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவது இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உலகத் தர டென்னிஸை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. தமிழகம் இந்திய டென்னிஸின் முன்னணி மையமாகத் தொடர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார்.

விஜய் அமிர்தராஜ்

கடந்த ஆண்டு நடைபெற்ற WTA 250 தொடரில் இந்திய வீராங்கனைகள் சஹஜா யமலபள்ளி, ஸ்ரிவள்ளி பாமிடிபட்டி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இளம் திறமையாளர்களை உருவாக்கும் 'Next Level' திட்டத்தின் கீழ் 9 இளம் வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி, உடற்தகுதி மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சேலம் விறகு வியாபாரியின் மகள் காமன்வெல்த் வாள்வீச்சில் வரலாற்றுச் சாதனை! யார் இந்த கனகலட்சுமி?

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. விறகு வியாபாரியான இவரின் மகள் கனகலட்சுமி வாள்வீச்சில் திறமை வாய்ந்த வீராங்கனையாக சிறு வயது முதலே களமாடி வருகிறார். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற வாள்வீச்ச... மேலும் பார்க்க

சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசரவைத்த போட்டியாளர்கள் - ஈரோட்டில் கவனம் ஈர்த்த குதிரையேற்றப் போட்டி!

ஈரோடு, திண்டலில் உள்ள ஹார்ஸ் ரைடிங் கிளப்பில் ஆகஸ்ட் 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் அகில இந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது.ஈரோட்டில் முதன்முறையாக நடைபெற்ற இப்போட்டியில், ஊட்டி, ம... மேலும் பார்க்க

"`நரேந்திர' என்ற பெயர் பிடிக்கலை..!" - குத்துச்சண்டை வீரர் பகிர்ந்த சம்பவம்; உரக்கச் சிரித்த மோடி

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தனக்கு நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்... மேலும் பார்க்க

ஈரோட்டில் குதிரையேற்றபோட்டி - சாகசம் செய்த வீரர்கள்

ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ஈரோடு குதிரையேற்ற போட்டி ... மேலும் பார்க்க

ஜார்ஜியாவில் தங்க வேட்டை – சாதனை புரிந்த திண்டுக்கல் மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்பு!

மாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரேஷ்மிக்கு உற்சாக வரவேற்புமாணவி ரே... மேலும் பார்க்க

GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் 2026; 50,000 டாலர் பரிசு வென்ற பிரக்ஞானந்தா

இந்திய சதுரங்க ஆட்டக்காரர் ஆர்.பிரக்ஞானந்தா GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் (Blitz) 2026 சதுரங்கப் போட்டியில் 35 - 23 என்ற புள்ளிகளை பெற்று இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜவோகிர் சிந்தரோவை வீழ்த... மேலும் பார்க்க