செய்திகள் :

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாணிக்கம் (வயது: 31) என்பவரிடம் குண்டாங்கல் பாறையில் உள்ள பாட்டி வீட்டில் விடும்படி கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் மாணிக்கம் 4 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாட்டி வீட்டில் விடாமல் குண்டாங்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த 4 வயது சிறுமியை மாணிக்கம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து, சிறுமி தனது பாட்டியிடம் அழுது கொண்டே நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தனது பேத்திக்கு நடந்த கொடுமையைக் கேட்டு வேதனை அடைந்த பாட்டி, அரிவாளுடன் மாணிக்கத்தைத் தேடி வந்துள்ளார். இந்நிலையில், இன்று மதியம் தேவதானம் பகுதியில் மாணிக்கம் கட்டட வேலை செய்து கொண்டிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அங்கு சென்று பார்த்தபோது மாணிக்கம் அங்கு இல்லை. இதனை அடுத்து, அவரை தேடி திரிந்தபோது குளித்தலை பகுதியில் நின்று கொண்டிருந்த மாணிக்கத்தைப் பிடித்து காவல் நிலையத்திற்கு ஒப்படைக்க சாலையில் இழுத்து வந்துள்ளார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.

மாணிக்கம்

10 -க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இந்நிலையில், பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், சிறுமியின் பாட்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர். பின்னர், சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு அவரை விசாரணை செய்து வருகின்றனர். படுகாயம் அடைந்த மாணிக்கம், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 4 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், குளித்தலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க

கரூர்: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - த.வெ.க நிர்வாகி மீது புகார்; தற்கொலைக்கு முயன்ற கணவர்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாலவிடுதி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திர... மேலும் பார்க்க

உதவிய காதலன்; மயக்க மருந்து கலந்து கொடுத்து மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்ற மனைவி

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால்(55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அன்று அதிக... மேலும் பார்க்க

`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' - மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் 23 வயதான மகள் Phoebe Gates, தான் இணை நிறுவனராக இருக்கும் 'ஃபியா' (Phia) என்ற ஷாப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 'குக்கீ ஸ்டஃப்பிங்' (Cookie stuffin... மேலும் பார்க்க