செய்திகள் :

முதலமைச்சர் விஜய்யின் காஷ்மீர் `லியோ' கஃபே - அலைமோதும் தமிழக சுற்றுலாப் பயணிகள்!

post image

காஷ்மீரின் தெற்குப் பகுதியில், பஹல்காம் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் `சிஃபார் கஃபே' (Sifar Cafe) என்ற உணவகம் அமைந்துள்ளது. இதுதான் தற்போது தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் 2023-ல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான `லியோ' திரைப்படத்தில், அவர் `கஃபே வைல்ட் பீன்ஸ்' என்ற காபி ஷாப் நடத்துவார். அந்த காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்ட நிஜமான இடம்தான் இந்த சிஃபார் கஃபே.

லியோ கஃபே
லியோ கஃபே

தற்போது அங்கு செல்லும் தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகள், திரைப்படத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட அதே சாக்லேட் காபியை எஸ்பிரெசோ, சாக்லேட் சிரப் மற்றும் பால் கலந்து விரும்பி ஆர்டர் செய்கின்றனர். மேலும், கஃபேயில் `நா ரெடி' பாடலுக்கு நடனமாடியும், அங்கு வைக்கப்பட்டுள்ள விஜய்யின் போஸ்டர்களுடன் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்கின்றனர்.

இங்கு பணியாற்றுபவர் கூறும்போது, "லியோ படப்பிடிப்பு 25 நாள்கள் இங்கு நடந்தது. விஜய் சார் பெரும்பாலும் தனது கேரவனில் அமைதியாகவே இருப்பார். அவருக்கு காஷ்மீரின் புகழ்பெற்ற `ட்ரௌட்' மீனை பலமுறை பரிமாறியிருக்கிறோம்" என்று நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த கஃபே லியோ படம் வந்ததிலிருந்தே பிரபலமாக இருந்தாலும், கடந்த ஒரு வாரமாக அங்கு தமிழ்நாட்டு மக்களின் கூட்டம் திடீரென அலைமோதுவதற்கு ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு காரணமாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் `தமிழக வெற்றிக் கழகம்' (TVK) 108 இடங்களில் அபார வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

லியோ கஃபே
லியோ கஃபே

திரைப்படத்தில் ஒரு அமைதியான கஃபே ஓனராக, இரட்டை வாழ்க்கை வாழ்பவராக நடித்த விஜய், தற்போது நிஜ வாழ்க்கையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உருவெடுத்துள்ளதை அவரது ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடிவருகின்றனர். அந்த மாபெரும் அரசியல் வெற்றியின் எதிரொலிதான், பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி காஷ்மீரில் உள்ள இந்த `லியோ' கஃபேயிலும் ஒரு திருவிழாவாக எதிரொலிக்கிறது!

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி? ஒரே நாளில் ரூ.100 கோடி சம்பாதித்த கும்பல்?

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததால் ஒட்டுமொத்த தேர்வும் ரத்து ... மேலும் பார்க்க

பீகார்: ATM-க்குள் சென்று முடிவெட்டிக்கொள்ளும் மக்கள்; வைரலாகும் ஏடிஎம் சலூன் பற்றி தெரியுமா?

சமீப காலமாக ஆன்லைன் பணப்பரிவத்தனை அதிகரித்து இருப்பதால் மக்கள் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது குறைந்து இருக்கிறது. இதனால் அதிகமான ஏ.டி.எம்.கள் நகரங்களில் மூடப்பட்டு வருகின்றன. சில ஏ.டி.எம்.கள் பணம் நிரப... மேலும் பார்க்க

புனே: "தண்ணீருக்காக தினமும் காட்டுக்குள் 4 மணி நேரம் நடக்கணும்" - பழங்குடியினப் பெண்களின் அவலநிலை

மும்பைக்கு அண்டை மாவட்டமான தானே பகுதியில் இருந்துதான் தண்ணீர் சப்ளையாகிறது. ஆனால் அதே தானே மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தினமும் தண்ணிருக்காக 4 மணி நேரம் நடக்கும் அவல நிலை இருந்து வருகிறது... மேலும் பார்க்க

12 ஆண்டுகள் காத்திருந்த பெண்.... ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!

தம்பதிக்கு எத்தனை வசதிகள், செல்வங்கள் இருந்தாலும் குழந்தை இல்லை என்றால் அது ஒரு மிகப்பெரிய வருத்தமாகவே இருக்கும். எதியோப்பியாவில் ஒரு பெண் திருமணமாகி கடந்த 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார... மேலும் பார்க்க

ஏசி தண்ணீரில் சமையல்: வளைகுடா, ஹார்மூஸ் ஜலசந்தியில் தவிக்கும் இந்திய கப்பல் மாலுமிகள்

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து வளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது நாட்டிற்கு அருகில் இருக்க... மேலும் பார்க்க

"Constable போதும்; என்னை பதவியிறக்கம் செய்யுங்கள்" - Sub Inspector பதவியைத் திரும்பியளித்த காவலர்

அனைவரும் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்று விரும்புவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் டெல்லியைச் சேர்ந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் தனக்கு தனது பழைய கான்ஸ்டபிள் வேலையை மீண்டும் கொடுங்கள் என்று கேட்ட... மேலும் பார்க்க