செய்திகள் :

முதல்வர் விஜய்க்கு செவித்திறன் கருவியை அனுப்பிய கோவை சமூக ஆர்வலர்; காரணம் என்ன?

post image

தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் நிலையில், அவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக முதலமைச்சரை விஜய்யைக் கண்டித்து, கோவையில் சமூக ஆர்வலர் பெரியார் மணி என்பவர் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செவித்திறன் கருவியை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

செவித்திறன் கருவியை கோவை  தபால் நிலையத்தில் இருந்து முதல்வர் விஜய்யின் பனையூர் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைத்தார்.

இது குறித்து பேட்டியளித்த பெரியார் மணி, “தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பிஞ்சுக் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் எதிராக சம்பவங்களும், பாலியல் குற்றங்களும், கொலைகளும் நடந்து வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இதுபோன்ற விவகாரங்களில் உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினால், அவர் எதையும் காதில் வாங்காதது போலவே கடந்து செல்கிறார். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க எவ்வித கடுமையான உத்தரவுகளையும் அவர் பிறப்பிக்கவில்லை.

விஜய்
விஜய்

கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதே போன்ற சம்பவங்களுக்கு குரல் கொடுத்தவர், தற்போது முதலமைச்சரான பிறகு வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சத்தமிட்டு கூப்பிட்டும், அவர் காது கேட்காதது போல நகர்ந்து செல்கிறார். எனவே, அவருக்கு ஏதேனும் காது கேட்கும் திறன் குறைபாடு இருக்குமோ என்ற எண்ணத்தில், தமிழக மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் அவருக்கு முதலமைச்சர் அலுவலக முகவரிக்கு செவித்திறன் கருவி ஒன்றை பார்சல் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

இந்தக் கருவியைப் பொருத்திய பிறகாவது, தமிழகத்தில் பாதிக்கப்படும் குழந்தைகளின் கதறல்களும், பெற்றோர்களின் கண்ணீர்க் குரல்களும் முதலமைச்சரின் காதுகளில் விழுந்து, அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தாக்கரே கட்சியில் `பிளவு 2.0' தனிஅணியாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் உத்தவ் கட்சி எம்.பி.க்கள் மனு!

மகாராஷ்டிரா சிவசேனாவில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பிளவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தனி கட்சி மற்றும் தனி சின்னத்துடன் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் தற்போது சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை தன் வசம் வைத்த... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்தில் `ப்ரோ', `அங்கிள்' என்று பேசிய விஜய் எங்கே? - நயினார் நாகேந்திரன் காட்டம்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவ... மேலும் பார்க்க

'நோ' அணுசக்தி டு ஃப்ரீ ஆகும் ஈரான் சொத்துகள்: அமெரிக்கா, ஈரான் MoU-ன் 14 புள்ளிகள்? | Simplified

நேற்று (ஜூன் 17) ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 14 புள்ளிகளாக அமெரிக்கா வெளியிட்டுள்ளவை... (புள்ளிகள் எளிமையாக்கப்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர்!

தவெக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது என்பதைத் தாண்டி, இன்றைய சட்டமன்றம் மிகவும் கவனமாகக் கவனிக்கப்படக் காரணம் — தமிழ்த்தாய் வாழ்த்து.தமிழ்நாட்டின் வழக்கப்படி, தமிழ்நாடு அரசு நிகழ்வுகளில் ம... மேலும் பார்க்க

”தவெக-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” - குற்றம் சாட்டும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “சிங்கப்பெண் படையில் உள்ள பெண் காவலர்களின் நகைகளே திருடப்பட்டுள்ளன. அந்தப் படையில் உள்ள காவ... மேலும் பார்க்க

பி.டி.ஆர் vs மரிய வில்சன் : தவெக அரசின் வெள்ளை அறிக்கையின் போதாமைகள் என்னென்ன?

தமிழகத்தின் நிதி நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது த.வெ.க-வின் கூட்டணி அரசு. கடந்த 5 ஆண்டுகளில் கஜானா எந்தளவுக்கு காலியாக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிக்க... மேலும் பார்க்க