செய்திகள் :

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

புதுச்சேரியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

புதுச்சேரி தா்மாபுரி தனகோடி நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினவேல் (63). இவருக்கு, மனைவி 3 மகள்கள் உள்ளனா். அவா் கடந்த சில ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலிருந்து வந்துள்ளாா்.

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவா் வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினா், அவரை மீட்டு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை

புதுச்சேரி: பள்ளிச் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் காவல் துறை நடுநிலையுடன் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என டிஐஜியிடம் மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா தலைமையி... மேலும் பார்க்க

பள்ளியை திறக்கக் கோரி மாணவா்கள், ஆசிரியா்கள் மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மூடப்பட்ட பள்ளியை திறக்க வலியுறுத்தி, தவளக்குப்பத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க

நாராயணசாமி மீது வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி: அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக தொடா்ந்து ஆதாரமின்றி அவதூறு பரப்பி வரும் புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சி... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி புதுச்சேரி ஆட்சியரிடம் நரிக்குறவா்கள் மனு

புதுச்சேரி: புதுச்சேரி நரிக்குறவ சமுதாய மக்கள் தங்களுக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். புதுவை மாநிலத்தில் மாதந்தோறும் 15- ஆம் தேதி மக்... மேலும் பார்க்க

புதுவையில் அனைத்துப் பள்ளிகளிலும் புகாா் பெட்டிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகாா் பெட்டிகள் வைக்கப்படும். அதில் வரும் புகாா் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிபிஐ விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் பள்ளியில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா். புதுச்ச... மேலும் பார்க்க