செய்திகள் :

மும்பை: ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற டிரைவர் - உயிருக்கு போராடிய நோயாளி உயிரிழப்பு

post image

மும்பை புறநகர் ரயில்களில் இருந்து கீழே விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இது போன்று ரயிலில் இருந்து விழுந்து காயம் அடையும் பயணிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து பன்வெல் என்ற இடத்திற்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த ஹர்ஷ் பட்டேல்(25) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ரயிலில் மயங்கி விழுந்தார். ரயிலில் இருந்தவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

ரயில் வாஷி ரயில் நிலையம் வந்தபோது பயணி அவசர அவசரமாக ரயிலில் இருந்து இறக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு வெளியில் நின்ற ஆம்புலன்ஸிற்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகு பார்த்தால் டிரைவரை காணவில்லை.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் மதிய உணவு சாப்பிட சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸ் ஜீப் ஒன்றில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை டாக்டர்கள் சோதித்ததில் அவர் இறந்திருந்தார். கடுமையான மாரடைப்பு காரணமாக இறந்திருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் நோயாளியை காப்பாற்றி இருக்க முடியும். இது குறித்து ரயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரண் கூறுகையில்,''ஆம்புலன்ஸ் டிரைவர் 24 மணி நேரமும் பணியில் இருக்கவேண்டும். ஆம்புலன்ஸை தனியாக விட்டு விட்டு டிரைவர் செல்வது கவனக்குறைவு ஆகும். இறந்தவருக்கு ஏற்கனவே உடல் நலப்பிரச்னை இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்''என்றார்.

இது குறித்து ஹர்ஷ் பட்டேல் சகோதரி அம்பிகா சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ''வாஷி நிலையத்தில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி இல்லாததால் எனது சகோதரர் உயிரிழந்ததார். ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலி அல்லது முதலுதவி வசதி இல்லை. ஸ்ட்ரெச்சர் இல்லாததால் துணியில் எனது சகோதரனை ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்ல சக பயணிகள் உதவினர். ஸ்டேஷனுக்கு வெளியே 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் ஓட்டுநரை காணவில்லை. மதியம் 2.10 மணியளவில் எனது சகோதரனை ஆம்புலன்சுக்குள் வைத்துவிட்டு டிரைவர் வருவதற்காக காத்திருந்தோம்.

மருத்துவ அவசரத்தில் அந்த நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால், முக்கியமான நேரத்தில் எனது சகோதரனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டது''என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸில் ஹர்ஷ் பட்டேல் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். வாஷி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சில நேரம் சொல்லாமல் விடுமுறை எடுத்துக்கொள்வதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்... மேலும் பார்க்க

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க