செய்திகள் :

மும்பை: ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு சாப்பிட சென்ற டிரைவர் - உயிருக்கு போராடிய நோயாளி உயிரிழப்பு

post image

மும்பை புறநகர் ரயில்களில் இருந்து கீழே விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இது போன்று ரயிலில் இருந்து விழுந்து காயம் அடையும் பயணிகளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து பன்வெல் என்ற இடத்திற்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த ஹர்ஷ் பட்டேல்(25) என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ரயிலில் மயங்கி விழுந்தார். ரயிலில் இருந்தவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

ரயில் வாஷி ரயில் நிலையம் வந்தபோது பயணி அவசர அவசரமாக ரயிலில் இருந்து இறக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு வெளியில் நின்ற ஆம்புலன்ஸிற்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸில் ஏற்றிய பிறகு பார்த்தால் டிரைவரை காணவில்லை.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் மதிய உணவு சாப்பிட சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸ் ஜீப் ஒன்றில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை டாக்டர்கள் சோதித்ததில் அவர் இறந்திருந்தார். கடுமையான மாரடைப்பு காரணமாக இறந்திருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்திருந்தால் நோயாளியை காப்பாற்றி இருக்க முடியும். இது குறித்து ரயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரண் கூறுகையில்,''ஆம்புலன்ஸ் டிரைவர் 24 மணி நேரமும் பணியில் இருக்கவேண்டும். ஆம்புலன்ஸை தனியாக விட்டு விட்டு டிரைவர் செல்வது கவனக்குறைவு ஆகும். இறந்தவருக்கு ஏற்கனவே உடல் நலப்பிரச்னை இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்''என்றார்.

இது குறித்து ஹர்ஷ் பட்டேல் சகோதரி அம்பிகா சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ''வாஷி நிலையத்தில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி இல்லாததால் எனது சகோதரர் உயிரிழந்ததார். ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலி அல்லது முதலுதவி வசதி இல்லை. ஸ்ட்ரெச்சர் இல்லாததால் துணியில் எனது சகோதரனை ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்ல சக பயணிகள் உதவினர். ஸ்டேஷனுக்கு வெளியே 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் ஓட்டுநரை காணவில்லை. மதியம் 2.10 மணியளவில் எனது சகோதரனை ஆம்புலன்சுக்குள் வைத்துவிட்டு டிரைவர் வருவதற்காக காத்திருந்தோம்.

மருத்துவ அவசரத்தில் அந்த நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால், முக்கியமான நேரத்தில் எனது சகோதரனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டது''என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸில் ஹர்ஷ் பட்டேல் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். வாஷி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சில நேரம் சொல்லாமல் விடுமுறை எடுத்துக்கொள்வதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் முதலீடு: லிங்க் அனுப்பி, பொறியாளரிடம் ரூ.3.24 கோடி மோசடி - சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த 47 வயது நபர், அபுதாபியில் பொறியாளராக வேலைச் செய்கிறார். இவர், அண்மையில் விடுமுறை எடுத்துக்கொண்டு காட்பாடியிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அவரின் வா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த கொழுந்தன் - மனைவியை அவதுறாக பேசியதால் ஆத்திரம்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (30). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி (26). இந்தத் த... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலன் துணையோடு கணவனை கொன்று, உடலை வெட்டி வீசிய மனைவி - சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தெளசி என்ற இடத்தில் பேக் ஒன்று சாலையோரம் கிடந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ஒருவரின் உடல் இருந்தது. அதில் கை, கால் மற்றும் தலை இல்லாமல் இ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹ... மேலும் பார்க்க

நண்பர் அறை என கருதி கதவை தட்டிய செவிலியர்; உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் - அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து கிரண் ரத்தோட் உட்பட 3 நண்பர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்நேரம் பெண் ஒருவர் வந்து அந்த அறை கதவ... மேலும் பார்க்க