செய்திகள் :

மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

post image

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் அக்கட்டடம் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டன. மோப்ப நாய் படை, நான்கு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் கனரக மண் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்தனர்.

மீட்பு பணி

இடிந்து விழுந்த கட்டடத்தில் வசிக்கும் சாகுல் ஹமீத் என்பவர் சம்பவம் குறித்து கூறுகையில், ``கட்டடம் இடிந்து விழுவதற்கு முன்பு மிகப்பெரிய சத்தம் கேட்டது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கட்டடத்தில் வசித்த பல குடும்பங்கள் அங்கிருந்து காலி செய்துவிட்டன. மேலும் சிலர் வீட்டை காலி செய்ய தயாராகிக்கொண்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்தது'' என்று தெரிவித்தார்.

கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது குறித்து கேள்விப்பட்டு மாநகராட்சி துணை கமிஷனர் அர்விந்த் நேரில் வந்து பார்வையிட்டார். இது குறித்து அர்விந்த் கூறுகையில், ''நாங்கள் அங்கு சென்றபோது, ​​அந்தக் கட்டடம் விரிசல் அடைந்து கொண்டிருப்பதைக் கண்டோம். எங்கள் குழுவுடன் உள்ளே சென்று அங்கிருந்தவர்களை வெளியேற்றினோம். வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வெளியே வந்துவிட்டனர்; இருப்பினும், சில பெண்கள் தாங்கள் சாப்பிட்டுவிட்டுப் பிறகு வருவதாக ஆரம்பத்தில் கூறினர்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளே பழைமையானதாகக் கருதப்படும் அந்தக் கட்டடத்தில், பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வரவில்லை. நாங்கள் வெளியே வந்த சில நிமிடங்களிலேயே அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது" என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து இடிந்து விழுந்த கட்டடத்தில் வசித்த அபய் குமார் யாதவ் கூறுகையில், ``நானும் எனது குடும்பத்தினரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தபோது, ​​கட்டடத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் எங்கள் அறைக்குள் இருந்தோம். அப்போது பலத்த சத்தம் கேட்டது. நாங்கள் உடனடியாக வெளியே ஓட முயற்சித்தோம், ஆனால் தப்பிக்க வழி இல்லை. அதனால் நான் முதல் மாடியில் இருந்து குதித்தேன். விழுந்ததில் தனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது'' என்று கூறினார்.

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைத்தவர்கள் உட்பட 10 பேர் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவர் மனைவி செல்வி (41), இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம்; திறக்கப்பட்ட 16 நாள்களில் சேதம்; அதிர்ச்சியில் மக்கள்

வடமாநிலங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்துவிழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந... மேலும் பார்க்க

சிக்கிம் சுரங்கப்பாதை நிலச்சரிவு: சுரங்கத்தில் சிக்கிய 25 பேர்; 10 பேர் பலி? - தலைவர்கள் இரங்கல்

சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில், 'என்ஹெச்பிசி டீஸ்டா கட்டம் VI' நீர்மின் திட்டத்திற்காக 'ADIT-3' என்ற சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிலச்ச... மேலும் பார்க்க

கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; தீக்கிரையான வீடுகள்; நடந்தது என்ன?

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நாகராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் பெர்ஹ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்

கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர். பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட... மேலும் பார்க்க