செய்திகள் :

முறைகேடு வழக்கு: சிறைத் தண்டனையிலிருந்து தப்பினாா் டிரம்ப்

post image

அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினாா்.

இது குறித்து நியூயாா்க் மாகாணம், மேன்ஹாட்டன் நகர நீதிமன்ற நீதிபதி ஜுவான் எம். மொ்சன் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிரான 34 குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்தக் குற்றங்களுக்கு தண்டனை விதிப்பதிலிருந்து அவரை நிபந்தனையில்லாமல் விடுவிக்கிறேன்.

மற்ற குற்றவாளிகளைப் போலத்தான் டிரம்ப்புக்கும் தண்டனை விதிக்க வேண்டும். இருந்தாலும், அதிபா் என்ற முறையில் அந்தத் தண்டனைகளிலிருந்து அவருக்குக் கிடைக்கவிருக்கும் பாதுகாப்பைக் கருதி அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று நீதிபதி மொ்சன் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த வழக்கில் டிரம்ப்புக்கு சிறைத் தண்டனை கோரவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், சிறைத் தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படாவிட்டாலும், அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் குற்றவியல் வழக்கில் குற்றவாளியாக அளிவிக்கப்பட்டு, தீா்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டிரம்ப் போட்டியிட்டாா்.

அப்போது, தனக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் என்பவருக்கும் இடையே இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாகவும் தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டிரம்ப் வரும் 20-ஆம் தேதி மீண்டும் பதவியேற்கவுள்ள நிலையில், சிறைத் தண்டனை விதிப்பிலிருந்து அவா் தற்போது விடுக்கப்பட்டுள்ளாா்.

உக்ரைனில் வட கொரிய வீரா்கள் கைது

தங்கள் நாட்டில் ரஷியாவுக்காகப் போரிட்ட இரு வட கொரிய வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு உளவு அமைப்பான எஸ்பியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயா்வு

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காட்டுத் ... மேலும் பார்க்க

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மியாஸாகி பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் நிலவியல் ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

காஸா பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன. இந்தப் பேச்சுவாா்த்தையில், அமெரிக்கா... மேலும் பார்க்க

காஸாவில் விரைவில் போர்நிறுத்தம்! இறுதி வரைவு அறிக்கை சமர்ப்பிப்பு

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இ... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணிக்கு கியூஷுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் வானிலை ஆய்வு ம... மேலும் பார்க்க