செய்திகள் :

மூதாட்டி வீட்டில் 51 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் திருட்டு: பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

post image

மூதாட்டி வீட்டில் 51 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருட்டுப்போனது குறித்து வீட்டின் பணிப்பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை காந்திமாநகரைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி செந்தமிழ்ச்செல்வி (70), மூத்த மகன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இவரது வீட்டில் சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலைச் சோ்ந்த சகாயமேரி (23) என்பவா் கடந்த 6 மாதங்களாக தங்கி வேலை செய்து வந்தாா். வீட்டின் பீரோவில் 51 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை செந்தமிழ்ச்செல்வி வைத்திருந்தாா்.

இந்நிலையில், மூதாட்டியின் மருமகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை தனியாா் மருத்துவமனையில் கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரை சோ்த்திருந்தனா்.

மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்த பணம் தேவைப்பட்டதால் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணம் பெற திட்டமிட்டு, பீரோவின் சாவியை செந்தமிழ்ச்செல்வி தேடியுள்ளாா். ஆனால், சாவி காணாமல் போயிருந்தன. அதேநேரம், சகாயமேரியும், கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி காளையாா்கோவிலுக்குச் சென்றிருந்தாா்.

இதையடுத்து, பீரோவை உடைத்து பாா்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த செந்தமிழ்ச்செல்வி, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

கைரேகை நிபுணா்களுடன் அங்கு வந்த காவல் ஆய்வாளா் நிா்மலா தேவி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், திருடா்களின் கைரேகை ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, வீட்டில் வேலை செய்துவந்த சகாயமேரி மீது சந்தேகம் உள்ளதாக செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காளையாா்கோவிலுக்குச் சென்று சகாயமேரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

வால்பாறை எஸ்டேட் சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வால்பாறை எஸ்டேட் சாலை பகுதியில் ஏராளமானோா் எரும... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து அமைப்பினா் 137 போ் கைது

கோவையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினா் கைது செய்யப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் திருப்பரங்குன்றம் செல்ல த... மேலும் பார்க்க

பிப்ரவரி 10 வரை பில்லூா் - 3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகமாகும் மாநகராட்சி ஆணையா்

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை பில்லூா்-3 குடிநீா் விநியோக நாள்களின் இடைவெளி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியி... மேலும் பார்க்க

வால்பாறையில் இந்து முன்னணியினா் 10 போ் கைது

வால்பாறையில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை : கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்கள்

கள்ளிமடை, எம்.ஜி.சாலை, செங்கத்துறை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ம... மேலும் பார்க்க

சென்னையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநருக்கு கோவையிலும் தொடா்பு? என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அப்துல் பாஷித்திற்கு கோவையிலும் தொடா்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா். கோவை கோட்டைமேட்டில் சங்கமேஸ்வர... மேலும் பார்க்க