செய்திகள் :

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

post image

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் செழிக்கும். குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

வறட்சியில் மேட்டூர் அணை

அதேவேளையில் பருவமழை தாமதம், அணையின் நீர்மட்டம், நீர் வரத்து போன்ற காரணிகளே தண்ணீர் திறப்புக்கான தேதியைத் தீர்மானிக்கும். அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயரும் பட்சத்தில் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். நடப்பு ஆண்டு ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அணையின் நீர்மட்டம் 79 அடியில் சரிந்து கிடக்கிறது. இதன் காரணமாகவே ஜூன் 12 - ம் தேதியான இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், ``ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்பட்டு, ஜனவரி 28-ம் தேதி மூடப்படும். இந்தக் காலகட்டத்தில் 330 டி.எம்.சி தண்ணீரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும். கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வறட்சியில் மேட்டூர் அணை

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934-ம் ஆண்டு தொடங்கி உரிய தேதியான ஜூன் 12-ம் தேதியன்று 20 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்கு முன்பே 11 முறை திறக்கப்பட்டுள்ளது. போதிய நீர் இருப்பு இல்லாததால் நடப்பாண்டுடன் சேர்த்து 62-வது ஆண்டாக காலதாமதமாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது" என்றனர்.

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க

C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'ஆவ்ரோ-748' (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்த... மேலும் பார்க்க

திருநெல்வேலி: களமிறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை! | Photo Album

திருநெல்வேலி: களம் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.! மேலும் பார்க்க