செய்திகள் :

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

post image

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக்கிக் கொண்டுவந்து அதிக விலைக்கு தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். மாநில எல்லைகளில் பல சோதனைச் சாவடிகள் இருந்தும் கண்ணில் மண்ணைத் தூவி கடத்தல் நடந்து வருகிறது.

குட்கா கடத்தல்

இந்த நிலையில், மைசூரில் இருந்து கோவைக்கு சரக்கு வாகனத்தில் குட்கா கடத்திச் செல்வதாக பர்கூர் அருகில் உள்ள சோதனைச் சாவடி காவலர்களுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கோவைக்கு பூண்டு லோடு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்றை சோதனை செய்தனர்.

அதில், வழக்கத்துக்கு மாறாக மூட்டைகள் அடுக்கியிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் பூண்டு லோடுகளில் குட்கா மூட்டைகளைப் பதுக்கி கொண்டு வந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குட்கா கடத்தல்

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "மைசூரில் இருந்து கோவைக்கு 70 மூட்டைகளில் 450 கிலோ குட்கா பொருள்களை இரண்டு நபர்கள் கடத்தி வந்துள்ளனர். பூண்டு மூட்டைகளுக்குள் வைத்து கடத்தி வந்த போத்தனூர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன உரிமையாளர் நவுசத் மற்றும் அவருடன் வந்த முபாரக் அலி ஆகிய இருவரையும் கைதுசெய்து குட்காவையும் பறிமுதல் செய்துள்ளோம். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க

டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! - சிக்கியது எப்படி?

வேலூர் கோட்டை வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை வடக்கு காவல் நிலையப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதில்சுவர் நடைபாதை பகுதியில் `டி.எஸ்.பி சீருடை’யில் பெண் ஒருவர் பிறந்த நாள் கேக்... மேலும் பார்க்க