செய்திகள் :

மேற்கு வங்க தலையெழுத்தை மாற்றிய SIR; வெறும் 12 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மம்தா அரசு தோல்வி

post image

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 206 தொகுதியில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 81 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

பா.ஜ.கவை எதிர்த்து மம்தா பானர்ஜியும் தன்னால் முடிந்த அளவுக்குப் போராடினார். தேர்தலில் மம்தா பானர்ஜி பாபானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க மூத்த தலைவர் சுவந்து அதிகாரி போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் மம்தா பானர்ஜியே முன்னிலையில் இருந்தார். 7வது சுற்று எண்ணப்பட்டபோது 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த மம்தா பானர்ஜியின் வாக்கு அடுத்த சுற்றுக்களில் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

பாஜக
பாஜக

14வது சுற்றில் வெறும் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த மம்தா பானர்ஜி அதன் பிறகு சுகந்து அதிகாரியை விட பின் தங்க ஆரம்பித்தார்.

இறுதியில் 15,105 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவினார். 2021ம் ஆண்டு தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவந்து அதிகாரியிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி இப்போது தனது சொந்த கோட்டையாகக் கருதப்படும் பாபானிபூர் தொகுதியிலும் சுவந்து அதிகாரியிடம் தோல்வியைச் சந்தித்து இருக்கிறார்.

இத்தொகுதி பல ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்தது. அதோடு இது மம்தா பானர்ஜியின் கெளரவப் பிரச்னையாகவும் இருந்தது.

12 லட்சம் வாக்கு வித்தியாசம்

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட வெறும் 4 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று இருக்கிறது. அதிகமான தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றிபெற்று இருக்கிறது.

பா.ஜ.க 1.39 கோடி வாக்குகளைப் பெற்று இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 1.26 கோடி வாக்குகள் பெற்று இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 12 முதல் 13 லட்சம் மட்டும்தான். மிகவும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க 85 முதல் 100 தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது.

வெறும் 4 சதவீத வாக்கு வித்தியாசமானது இத்தகைய பிரமாண்டமான அரசியல் விளைவை ஏற்படுத்துவது மிக அரிதான ஒன்றாகும். எனவே, இயல்பாகவே உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இத்தேர்தல் மம்தா பானர்ஜி மீதான ஒரு நேரடியான பொதுவாக்கெடுப்பாக அமைவதற்கு மாறாக, உண்மையில் யார் வாக்களிக்கும் வாய்ப்பைப் யார் பெற்றார்கள், யார் பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

முடிவை மாற்றிய SIR

வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயல்பாட்டில், சுமார் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இவர்களில், சுமார் 27 லட்சம் பேர் தங்களது வாக்குரிமைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

வெறும் 12-13 லட்சம் என்ற இறுதி வாக்கு வித்தியாசத்துடன் ஒப்பிடும்போது, ​​நீக்கப்பட்ட வாக்காளர்களின் அளவு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நீக்கப்பட்ட அந்த வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினர் மம்தா பானர்ஜிக்கு வாக்களித்திருந்தால் கூட, தொகுதி அளவிலான முடிவுகளில் அதன் தாக்கம் வித்தியாசமாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கும்.

2021-ஆம் ஆண்டு தேர்தலில் திரிணாமுல் கட்சி, பாஜக-வை விட சுமார் 60 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்தது. வாக்கு சதவீதத்தில் சுமார் 10 சதவீதம் இடைவெளி இருந்ததுடன், இது 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காணப்பட்டது. ஆனால் இப்போது நடந்துள்ள தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்து, வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" - பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங... மேலும் பார்க்க

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வ... மேலும் பார்க்க

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவ... மேலும் பார்க்க

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க