செய்திகள் :

ரஜினி - விஜய் குறித்த பேச்சு: `நான் பின் வாங்கப்போவதில்லை' - விளக்கம் அளித்த விஷ்ணு விஷால்

post image

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி ஒன்றில் பேசியிருந்தது சர்ச்சை கிளப்பி இருந்தது.

'கட்டா குஸ்தி-2'
'கட்டா குஸ்தி-2'

அதவாது பேட்டியில் பேசியிருந்த அவர், " சோஷியல் மீடியாவின் பயன்பாடு இன்று மிக மிக அதிகமாக இருக்கிறது. அவை சில சமயங்களில் ஆபத்தானதாகவும் மாறுகிறது.

தலைவரே (ரஜினி) மைக்கை பிடித்துக்கொண்டு, 'எனக்கும் விஜய்க்கும் ஒன்றும் இல்லை' என விளக்கம் சொல்லும் நிலைமைதான் இருக்கிறது. அப்படிப்பட்ட விசித்திரமான சூழலில்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தலைவரே கூட நான்கு நாட்கள் எந்தப் பதிவும் போடாமல் அமைதியாக இருந்தால்கூட அவரை பற்றி ஏதோ ஒரு தவறான விஷயத்தை கிளப்பி சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாக்கிவிடுகிறார்கள்.

இதனால் அவரே வேறு வழியில்லாமல் நான் ஏன் இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நொந்து போய் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது" என்று பேசியிருந்தார்.

விஷ்ணு விஷாலின் இவ்வாறு பேசியதற்கு, "'எப்படி நீங்கள் ரஜினியை தலைவர் என்று சொல்லிவிட்டு, விஜய்யை மட்டும் பெயர் சொல்லி அழைக்கலாம்' என விஜய் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வந்தனர்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

இந்நிலையில் செய்தியார்கள் சந்திப்பில் இதற்கு விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

"விஜய்யை பற்றி ரஜினி என்ன பேசிருக்கார் என்பதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். ரஜினியும் விஜய்யை விஜய் என்றுதான் சொல்லியிருக்கிறார். நிறைய பேர், 'ரஜினியை மட்டும் ஏன் தலைவர் என்று கூப்பிட்டுவிட்டு, விஜய்யை பெயர் சொல்லி அழைத்தீர்கள்' என கேட்கிறார்கள்.

ரஜினி விஜய் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதைத்தானே நானும் சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது. யாரையும் கஷ்டப்படுத்த நான் அப்படி பேசவில்லை. சோஷியல் மீடியாக்களில் தென்படும் வன்மம் பற்றித்தான் பேசினேன். அதில் இருந்து நான் பின் வாங்கப்போவதில்லை" என்று விளக்கமளித்திருக்கிறார்.

`நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?'- நற்பணி மன்றம் கொடுத்த அதிகாரப்பூர்வ விளக்கம் என்ன?

அகில இந்தியா சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ' காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது' ... மேலும் பார்க்க

Resort: "தாத்தா பெயரை யூஸ் பண்ணினால் எனக்கு பிரஷர் வந்திடும்!" - கே.பாலசந்தர் பேரன் விஷ்ணு பேட்டி

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது 'ரெசார்ட்' சீரிஸ். அந்த சீரிஸில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் தன்யா மற்றும் விஷ்ணு பாலாவை நம் டெலி விகடன் சேனலுக்காகப் பேட்டி கண்டோம். மறைந்த இ... மேலும் பார்க்க

வேலூர் கம்பன் கழகம் - ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழா!

வேலூர் கம்பன் கழகம் மற்றும் ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழாவினைச் சிறப்பாக நடத்தின. விழாவிற்கு வேலூர் கம்பன் கழகத்தின் தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் து... மேலும் பார்க்க

"அந்த இடம் சர்கஸ் கூடாரம் போல இருந்தது" - பாக்யராஜின் இறுதி அஞ்சலி குறித்து ராதிகா சரத்குமார்

இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பாக்யராஜ் நேற்று முன்தினம் (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார். அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. பாக்யராஜ் மறைந்த நாளிலேயே அவரது உடல் ... மேலும் பார்க்க

பாக்யராஜ்: 'வெள்ளாங்கோயில் இருந்து கோடம்பாக்கத்துக்கு சினிமா கனவுகளைச் சுமந்தவர்' - பகிரும் கிராமம்

தமிழ் திரையுலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் திரைக்கதை மன்னராகவும் போற்றப்படும் பாக்யராஜ் அவர்களின் மறைவு திரையுலகம் மட்டுமின்றி அவரின் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.அவரின் மற... மேலும் பார்க்க

What To Watch: 'Con City' முதல் 'அவதார்' வரை; இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.கான் சிட்டி - தமிழ்ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதா ரவி, சாக்ஷி வைத்யா, வடிவுக்கரசி, வி... மேலும் பார்க்க