'Keep the body guessing': கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத...
ரயிலில் திருட்டு போன பேக்; மும்பை தெருக்களில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்
மும்பையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புறநகர் ரயில்கள், சாலை சிக்னல்கள், மசூதிகள், கோயில்களில் யாசகம் பெறுகின்றனர். இதுபோன்று யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக மும்பை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மும்பை மலாடு பகுதியில் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட வாலிபர் ஒருவர் யாசகம் பெறுவதை பார்த்து அவரை போலீஸார் பிடித்துச்சென்றனர். அவரிடம் விசாரித்தபோது அவரால் சரியாக பேச முடியவில்லை. அவர் மன அழுத்ததில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று நன்றாக குளிக்க வைத்து சாப்பாடு வாங்கிக்கொடுத்தனர். அவர் ஓரளவுக்கு பழைய நிலைக்கு வந்ததும் அவரிடம் போலீஸார் விசாரித்தபோது அவரது பெயர் அபய் என்றும், நாண்டெட்டில் உள்ள கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவம் மூன்றாவது ஆண்டு படிப்பதாக தெரிவித்தார். உடனே அவர் சொன்ன நாண்டெட் தம்ஷா பகுதி போலீஸாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அங்கு அபய் போன்ற ஒருவரை காணவில்லை என்று புகார் பதிவாகி இருந்தனர். புகார் கொடுத்தவர் தனது போன் நம்பரை கொடுத்திருந்தார்.
அந்த நபருக்கு போன் செய்தபோது அது மும்பையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அபய் தந்தை என்று தெரிய வந்தது. உடனே அவரது தந்தையை வரவழைத்து இது குறித்து தெரிவித்தனர். புகைப்படத்தை இரு போலீஸ் நிலையத்திலும் பகிர்ந்து அது அபய் என்று உறுதி செய்யப்பட்டது. அபய் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் மூலம் மும்பைக்கு வந்துள்ளார். அவர் ரயிலில் வரும்போது அவரது பேக் திருட்டு போய்விட்டது. அபய் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே அவரால் தனது பெற்றோர் அல்லது உறவினரின் போன் நம்பரை நினைவுபடுத்த முடியவில்லை.
எனவே பிழைப்புக்கு தெருக்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். போலீஸார் கொடுத்த தகவலை தொடர்ந்து அபய் தந்தை உடனே மும்பைக்கு கிளம்பி வந்தார். அவரிடம் போலீஸார் அபயை ஒப்படைத்தனர். அபய் மன அழுத்ததுக்கு நாண்டெட்டில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டதாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று அபய் தந்தை தெரிவித்தார். அபயை போலீஸ் நிலையத்தில் பார்த்ததுவும் அவரது தந்தை அப்படியே ஆனந்த கண்ணீர் வடித்தார். தனது மகனை கண்டுபிடித்து கொடுத்ததற்காக மும்பை போலீஸாருக்கு அபய் தந்தை நன்றி தெரிவித்துக்கொண்டார். அபய் தந்தை ஆசிரியராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



















