செய்திகள் :

ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம்

post image

2026-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வந்தால், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

இந்தப் போரை நிறுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தீவிரமாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சமீபத்தில், இரு தரப்பும் ட்ரம்ப் முயற்சிகளுக்கு பாசிட்டிவ் சிக்னல் காட்டி வருகின்றன.

புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அது உக்ரைனின் வேலை என்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி

புதின் வீட்டின் மீது 91 டிரோன்கள் ஏவப்பட்டதாகவும், ஆனால், அனைத்தும் தகர்க்கப்பட்டன என்றும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதனால், பேச்சுவார்த்தையில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றும் என்றும் கூறியுள்ளார்.

ட்ரம்ப்

புதின் வீட்டின் மீது நடந்த தாக்குதல் குறித்து ட்ரம்ப், "புதினிடம் பேசி இந்தச் சம்பவம் குறித்து தெரிந்துகொண்டேன். எனக்கு மிகக் கோபம். நடந்த சம்பவம் எனக்கு பிடிக்கவில்லை. இது நல்லதல்ல" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஜெலன்ஸ்கி எக்ஸ் பதிவு

ஆனால், இந்தச் சம்பவத்தை முற்றிலும் மறுத்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்ப் குழுவின் போர் நிறுத்த முயற்சியைக் குலைக்கத்தான் ரஷ்யா இப்படிச் செய்கிறது.

புதின் வீட்டின் மீதான தாக்குதல் என்பது புனைவுக் கதை. போர் நிறுத்தத்தைத் தடுக்கத்தான் ரஷ்யா இதைச் செய்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய்.

ரஷ்யா கிய்வ் நகர் மீதும், அமைச்சரவை மீதும் ஏற்கெனவே தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால், பதில் தாக்குதல் நடத்தினால், போர் நிறுத்த முயற்சி பாதிக்கப்படும் என்று உக்ரைன் எதுவுமே செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால்" - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்தி... மேலும் பார்க்க