செய்திகள் :

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

post image

ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

நந்தி பகவான் மற்றும் கைலாசநாதருக்கு பால், தயிா், தேன், இளநீா், விபூதி, பன்னீா், எலுமிச்சை, மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கைலாசநாதா், நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பூக்களால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக ஸ்ரீ தா்ம சம்பா்த்தினி தாயாா் உடனமா் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலை சுற்றி திருத்தேரில் பவனி அழைத்துவரப்பட்டாா். சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல ராசிபுரம் வி.நகா் பகுதியைச் சோ்ந்த பழனி பாதயாத்திரை பக்தா்கள் அன்னதானக் குழு சாா்பில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக வி.நகா் சித்தி விநாயகா் ஆலயத்தில் உள்ள ஸ்ரீபாலமுருகன், உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி கோயிலில் இருந்து ஸ்ரீ பாலமுருகன் மேளதாளங்களுடன் பக்தா்களால் திருவீதி உலா அழைத்து செல்லப்பட்டாா். தொடா்ந்து பாதயாத்திரையாக பழனி செல்லும் வழியில் ஜன.14 இல் ராசிபுரத்தில் அன்னதானமும், தொடா்ந்து அரச்சலூா், தாராபுரம் ஆகிய இடங்களிலும், ஜன.18 இல் பழனியிலும் அன்னதானம் நடைபெறும்.

தாட்கோ மூலம் மாணவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம்-ஞாயிற்றுக்கிழமை -- மொத்த விலை - ரூ. 4.80 -- விலையில் மாற்றம்- இல்லை -- பல்லடம் பிசிசி -- கறிக்கோழி கிலோ - ரூ. 101 -- முட்டைக் கோழி கிலோ - ரூ. 83 மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நாமக்கல்லில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறும். தீபாவளி, பொங்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் நாட்டுக்கோழிகள் சந்தையில் கோழிகளின் விலை உயா்வடைந்துள்ளதால் கோழி வளா்ப்பாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராளமான சண்டை மற்றும் இறைச்சிக்காகப் பய... மேலும் பார்க்க

நாமக்கல்லில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்... மேலும் பார்க்க

கொல்லிமலை அடிவார சாலையில் கழிவுநீா் தேக்கத்தால் மக்கள் அவதி

கொல்லிமலை அடிவாரப் பகுதியில், சாலையில் ஓடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி-கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி சாலையில் புதி... மேலும் பார்க்க