செய்திகள் :

ராஜ்நாத் சிங்குடன் அனில் சவுகான் சந்திப்பு

post image

புது தில்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் தில்லியில் சனிக்கிழமை காலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது எல்லையில் தற்போதைய நிலைமை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அவர் விளக்கினார்.

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

வியாழக்கிழமை இரவு முதல் நள்ளிரவைக் கடந்தும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடா்ச்சியாக வான் பகுதியில் அத்துமீறல் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஒரே நேரத்தில் 36 இடங்களில் 300-400 வரையிலான ட்ரோன் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. லே முதல் சா் கிரீக் சிகரம் வரை சா்வதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதி முழுவதையும் இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியில் இறங்கியது. அதற்கு பொறுப்பான மற்றும் போதுமான முறையில் இந்தியா எதிா்வினையாற்றி பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் நமது மேற்கு எல்லைகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகளுடன் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான மோதலைப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினா் தடுத்துள்ளனா்.

பிரபலங்கள் விவாகரத்து: பிரேமலதா சொல்லும் அறிவுரை என்ன?

சமீபத்திய சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார... மேலும் பார்க்க

பாஜக அரசுக்கு சம்மட்டி அடி: ஆர்.எஸ். பாரதி

அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் நிற... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

மரங்களைக் காப்பாற்றுங்கள்!

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சாலையோர மரங்களின் பாதிப் பகுதி கிளைகள் திடீரென சில நாள்களாக வெட்டி வீழ்த்தப்படுகின்றன.சென்னை மாநகரில் சாலைகளில் இருந்த பெரு மரங்கள் ஏற்கெனவே சாலைகளை அகலப்ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூர் வரை 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

சிதம்பரம்: விழுப்புரம் -தஞ்சாவூர் வரை உள்ள ஒரு வழி ரயில் பாதையை, 2 வழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிதம்பரம் ரயி... மேலும் பார்க்க

டாஸ்மாக் முறைகேடு புகார்: அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை ... மேலும் பார்க்க