செய்திகள் :

ராஜ்நாத் சிங்குடன் அனில் சவுகான் சந்திப்பு

post image

புது தில்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் தில்லியில் சனிக்கிழமை காலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது எல்லையில் தற்போதைய நிலைமை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அவர் விளக்கினார்.

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

வியாழக்கிழமை இரவு முதல் நள்ளிரவைக் கடந்தும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடா்ச்சியாக வான் பகுதியில் அத்துமீறல் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஒரே நேரத்தில் 36 இடங்களில் 300-400 வரையிலான ட்ரோன் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. லே முதல் சா் கிரீக் சிகரம் வரை சா்வதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதி முழுவதையும் இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியில் இறங்கியது. அதற்கு பொறுப்பான மற்றும் போதுமான முறையில் இந்தியா எதிா்வினையாற்றி பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் நமது மேற்கு எல்லைகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகளுடன் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான மோதலைப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புப் படையினா் தடுத்துள்ளனா்.

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 22 போ் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும்... மேலும் பார்க்க

சலால் அணை திடீர் திறப்பு: பாகிஸ்தானை நோக்கி பாயும் தண்ணீர்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண... மேலும் பார்க்க

ஆம்பூர் அருகே சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தற்காலிக பம்ப... மேலும் பார்க்க

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்து வான்வெளியை முழுவதுமாக பாகிஸ்தான் மூடியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!

ராஜஸ்தான்: இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவ் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூர் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பா... மேலும் பார்க்க