செய்திகள் :

ராஞ்சி தேர்வு முறைகேடு: ``கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" - மாணவர்கள் அமைப்பு உறுதி

post image

டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தேர்வர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் தலைவர் ரவீந்திர பாஸ்வான், ``JSSC தேர்வுகள், TDPL முகமை நடத்திய தேர்வுகள் மற்றும் அரசுப் போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி அபய் திவாரியுடன் தொடர்புடைய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

Ranchi student prostest
Ranchi student prostest

சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும். தேர்வு வாரியங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்" ஆகிய என மூன்று முதன்மை கோரிக்கைகளை முன்வைத்தார். தங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் அறுதியிட்டுக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று, ராஞ்சியில் உள்ள மாநில அரசு விருந்தினர் மாளிகையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நான்கு அமைச்சர்கள் அடங்கிய மாநில அரசுப் பிரதிநிதிகள் குழுவும், JPSC, JSSC தேர்வர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பேர் கொண்ட மாணவர் குழுவும் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை விவாதித்தன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைச்சர் தீபிகா பாண்டே சிங், ``மாணவர்களின் முதன்மை கோரிக்கைகள் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சில விவகாரங்கள் குறித்து மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும். அதே வேளையில், போராட்ட களத்தில் தேச விரோத சக்திகள் ஊடுருவி இடையூறு விளைவிக்க வாய்ப்புள்ளதால், மாணவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது." என்றார்.

அமைச்சர்களுடன் மாணவர்கள் பிரதிநிதிகள் சந்திப்பு
அமைச்சர்களுடன் மாணவர்கள் பிரதிநிதிகள் சந்திப்பு

அரசின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த மாணவர் தலைவி நீது குஜூர், ``தங்களது மேடையில் தேச விரோத சக்திகளோ அல்லது டூல்கிட்களோ இல்லை. அரசுடனான இந்தச் சந்திப்பு நேர்மறையான சூழலில் நடைபெற்றது, சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசு ஆர்வம் காட்டுவது நம்பிக்கையளிக்கிறது. அரசு சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்புவதாகக் கூறியிருந்தாலும், கோரிக்கைகள் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படும் வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். முதலமைச்சரின் பதிலைப் பொறுத்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும்" எனக் குறீப்பிட்டிருக்கிறார்.

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமானப் பணிகள் தீவிரம் - 8 மாதங்களில் முடிக்க திட்டம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற... மேலும் பார்க்க

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன... மேலும் பார்க்க

"முதல்வர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வரும் என்பதால் அமைதியாக இருக்கிறார்!" - செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாரம்பர்ய காங்கேயம் நாட்டு மாடுகள் அழகுப் போட்டிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உள... மேலும் பார்க்க

All Party Meet: "விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட முக்கியம்!" - டி.கே. சிவக்குமார்

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கர்நா... மேலும் பார்க்க

கபினி அணை நீர்மட்டம் உயர்வு; தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்த கர்நாடகா!

தமிழ்நாட்டிற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் தற்போது திறந்துவிடப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக... மேலும் பார்க்க

"தீண்டாமைச் சுவரை உடனே அகற்றுங்கள்" - அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து கெஞ்சிய நபர்; என்ன நடந்தது?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 22-வது ஆண்டு புத்தக கண்காட்சி ... மேலும் பார்க்க