செய்திகள் :

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" - ஓவைசி சொல்வது என்ன?

post image

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலை நடத்தியது.

அந்தத் தாக்குதலுக்கு 'Bunyan Un Marsoos' எனப் பெயர் வைத்தது. இந்த வார்த்தை எப்படி வந்தது என்பது குறித்து AIMIM கட்சியின் தலைவரும், தெலங்கானா எம்.பி-யுமான அசாதுதின் ஓவைசி பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், "பாகிஸ்தான் அவர்களின் புதிய தாக்குதலுக்கு 'புன்யான்-அல்-மர்சூஸ்' என்று பெயரிட்டுள்ளது.

இது குர்ஆனில் உள்ள ஒரு வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் அல்லாஹ், 'நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால், ஒரு உறுதியான சுவரைப் போல நில்லுங்கள்' என்று கூறுகிறார்.

ஆனால் பாகிஸ்தான் இராணுவமும், அரசும் தீவிரப் பொய்யர்கள். முந்தைய அதே வசனத்தில், 'நீங்கள் செய்யாத விஷயங்களை ஏன் சொல்கிறீர்கள்' என்று அல்லாஹ் கேட்கிறார்.

உண்மையில் அவர்கள் குர்ஆனின் முழு நோக்கத்தையும் புரிந்து கொள்ள விரும்பாத அளவுக்குப் பொய்யர்கள்.

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள வங்காள முஸ்லிம்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது மட்டும் ஒரு சுவரைப் போல நிற்க மறந்துவிட்டார்களா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

India - Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' - ராணுவத்துக்கு அரசு அறிவுரை!

'அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!'இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க... மேலும் பார்க்க

'ஸ்ரீநகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தம்; அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆச்சு?’ - ஒமர் அப்துல்லா

'ஒமர் அப்துல்லா பதிவு!'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப... மேலும் பார்க்க

India - Pakistan:``தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவுக்கு வரும் மோதல்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து... மேலும் பார்க்க

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ... மேலும் பார்க்க

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க