செய்திகள் :

'ருத்துராஜின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறதா?' - ப்ளெம்மிங் என்ன சொல்கிறார்?

post image

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலம் சென்னை அணி ஏறக்குறைய ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில், போட்டிக்கு பிறகு பேசிய பயிற்சியாளர் ப்ளெம்மிங் தோனியின் ஓய்வு, ருத்துராஜின் கேப்டன்சி எதிர்காலம் என நிறைய விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.

Flemming

ப்ளெம்மிங் பேசியதாவது, ``இது ஒரு சவாலான சீசன். நாங்கள் இந்த சீசனை சிறப்பாக தொடங்கவில்லை. ஆனாலும் 6 போட்டிகளை வென்று கம்பேக் கொடுத்ததில் மகிழ்ச்சி. சில இளம் வீரர்கள் தங்களின் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். சில வீரர்கள் இடையில் காயமடைந்தது எங்களின் மொமண்டமை குலைத்தது.

தோனியின் ஓய்வு பற்றி நிறைய பேசிவிட்டோம். அணி நிர்வாகம்தான் அதில் முடிவெடுக்க வேண்டும். தோனி சென்னை அணியோடு இருப்பது ரொம்பவே முக்கியம். தோனி இந்த சீசனில் எந்த போட்டியிலும் ஆடவில்லையெனினும், இளம் வீரர்களால் சூழப்பட்ட இந்த அணியில் நிறைய தாக்கம் செலுத்தினார்.

ருதுராஜ் கெய்க்வாட் | Ruturaj Gaikwad

ருத்துராஜ் சென்னை அணிக்காக இதை விட சிறப்பாக ஆடியிருக்கிறார். அவரால் இப்போது ஆடுவதை விட இன்னும் சிறப்பாக ஆட முடியும். அவரின் ஆட்டத்தில் என்ன பிரச்னை என்பதையும் அவரே கண்டறிவார் என நினைக்கிறேன். ஒரு கேப்டனாக ருத்துராஜை பார்க்கையில், அவர் கடந்த சீசனில் பாதி போட்டிகளில் ஆடவில்லை. அதனால் அவர் மீது தீர்ப்புகளை எழுதுவதில் நியாயமில்லை. ஒரு ஆகச்சிறந்த கேப்டனின் இடத்தை ஒரு புதிய கேப்டன் வந்து நிரப்புவது அத்தனை எளிதான விஷயமில்லை. ருத்துராஜ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கொஞ்சம் கால அவகாசம் தேவைதான். கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் கற்றுக்கொள்கிறார். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த அணியின் திறமையான கேப்டனாக ருத்துராஜ் மாறி நிற்பார்" என்றார்.

CSK vs SRH : நீங்க ஜெயிக்கணுங்றதை மறந்துட்டீங்களே சிவாஜி!' - சேப்பாக்கத்தில் சரிந்த சி.எஸ்.கே!

அவன் நமக்காக ஜெயிக்கிறான், இவன் நமக்காக ஜெயிக்கிறான்னு சொல்றியே, முதல்ல நீ உனக்காக ஜெயிச்சு காட்டுடா!' என்கிற மீமை நிஜமாக்கி காட்டியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ப்ளே ஆப்ஸ் செல்ல மற்ற அணிகள் சி.எஸ... மேலும் பார்க்க

மன்னர் சார்லஸை முந்திய பிராண்ட் மதிப்பு: 15,000 கோடி சொத்துடன் கலக்கும் பெக்காம் தம்பதி!

விளையாட்டு உலகிலும் பேஷன் உலகிலும் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் டேவிட் பெக்காம் மற்றும் விக்டோரியா பெக்காம் தம்பதி, தற்போது நிதித்துறையில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.2026-ஆம் ... மேலும் பார்க்க

LSG vs CSK: 'போய் வாடா...' - சென்னையின் Playoff கனவு இனி 'திக்.. திக்..' தான்! எப்படி வென்றது லக்னோ?

ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வருவதற்குச் சாதகமாக விளையாடி கொண்டிருக்கும்போது,சென்னை அணி மட்டும், "நீங்கள் எவ்வளவு உதவினாலும் நாங்கள் 6 அல்லது 7வது இடத்திலேயேதான் இர... மேலும் பார்க்க

வெகுண்டெழுந்த மும்பை; தொடர் தோல்வியில் பஞ்சாப்; தத்தளிக்கும் டாப்-4 கனவு - நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில் நேற்று (மே-14)நடைபெற்ற பஞ்சாப் vs மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை அணி. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவ... மேலும் பார்க்க

'கருப்பன் வரான் வழி மறிக்காதே!' - விராட் கோலியின் வெறியாட்டத்தில் வீழ்ந்த கொல்கத்தா!

இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி....RCB vs... மேலும் பார்க்க

'விராட் கோலியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!' - ரஜத் பட்டிதார் வியப்பு!

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. பெங்கள... மேலும் பார்க்க