செய்திகள் :

'ரூ.14 லட்சம் ரொக்கம்; 153 ஏ.டி.எம் கார்டுகள்; 52 செல்போன்கள்' - போலீஸாரை அதிர வைத்த கும்பல் கைது?

post image

திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸார் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால், அந்த அறையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில் ரூ.14,40,000 ரொக்கப் பணம், 153 ஏ.டி.எம் கார்டுகள், 52 உயர்தர ஆண்ட்ராய்டு செல்போன்கள், 21 சிம் கார்டுகள், பணம் எண்ணும் இயந்திரம், மடிக்கணினி, மோடம், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

trichy
trichy

இதுகுறித்து, கே.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 பேரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (28), பழனி முருகன் (29), ராஜ்குமார் (22), பிரவீன் (24), முத்தமிழ்செல்வன் (24) மற்றும் அஜ்மீர் அலி (32) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் நஸ்ருதீன், தனது வீட்டைக் காலி செய்து தருமாறு வலியுறுத்தியபோது, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்து, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியதும் விசாரணையில் அம்பலமானது.

வீட்டு உரிமையாளரை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்தது, பலரது ஏ.டி.எம் கார்டுகளைத் திருடியது, போலி ஆவணங்கள் தயாரித்துக் கூட்டுச்சதியில் ஈடுபட்டது மற்றும் ஆன்லைன் பண மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 6 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி: பாழடைந்த கிணற்றில் இரு வாலிபர்களின் உடல்; தனியாக கிடந்த தலை; சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 7 அடி அகலம் 15 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த சில தினங்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால... மேலும் பார்க்க

திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' - அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!

திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இத... மேலும் பார்க்க

கிலோ கணக்கில் தங்கம்... கோடிக்கணக்கில் சொத்துகள் - DSP கைதில் அதிர்ந்துபோன அதிகாரிகள்; பின்னணி என்ன?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தெலங்கானா காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) சங்கிரெட்டி பீம் ரெட்டி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.கடந்த மே மாதம் பீம் ரெட்டி தனது மனைவியுடன் சார்தாம் யாத... மேலும் பார்க்க

வருங்கால கணவருடன் திருமண ஏற்பாடு; காதலனுடன் ரகசியக் கல்யாணம் - சியா கோயலின் இரட்டை வாழ்க்கை ?

புனேவைச் சேர்ந்த இளம் ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சியா கோயல், தனது வருங்கால கணவரான கேத்தனை கொலை செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, தனது ... மேலும் பார்க்க

`எனக்கு தனியாக செய்ய துணிச்சல் இல்லை... நீயும் வா!'- புனே தொழிலதிபர் கொலையில் வெளியான `பகீர்' தகவல்

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி ஷியா கோயலுக்கு, ஏற்கெனவே அவரது காதலன் சேத்தன் சவுத்ரி என்ற நபருடன் ரகசியத் திருமணம் நடந்துள்ளது, போலீஸ் வ... மேலும் பார்க்க

"அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் காதலிக்கு ஐபோன்" - கைதான ஊழியர் வாக்குமூலம்

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள் அப்பணத்தைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. இத்திருட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இது தொடர... மேலும் பார்க்க